கொவிட்-19 கொள்ளைநோய் உச்சத்தில் இருந்த வேளையில் பல்வேறு நாடுகளில் வேலைநிறுத்தங்களும் அதுதொடர்பான போராட்டங்களும் நிகழ்ந்தபோதும் சிங்கப்பூரில் உள்ள முதலாளிகளும் ஊழியர்களும் ஒற்றுமையுடன் ஈராண்டு களைக் கடந்து வந்திருப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்பினரிடையே காணப்படும் வலுவான பங்காளித்துவம் என்றார் அவர்.
கொள்ளைநோய் ஏற்படுத்திச் சென்றுள்ள மாற்றங்களை ஊழியர்கள் கடைப்பிடிப்பதில் பங்காளிகள் உதவ இந்த முத்தரப்பு முறை கைகொடுத்தது என்று டாக்டர் டான் தமது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
"உலகளவில் நீக்குப்போக்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளும் வகையில் முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் விருப்பங்கள் மாற்றம் கண்டு வருவதை நாம் காண்கிறோம்.
"இதுபோன்ற புதிய வேலை முறைக்கு உருமாற்றம் பெற நமது முதலாளிகளையும் ஊழியர்களையும் ஆதரிக்கும் முயற்சிகளை முத்தரப்பு பங்காளிகள் தொடருவார்கள்.
"மனிதவள அமைச்சு தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியன இவ்வாண்டு இறுதிக்குள் முத்தரப்பு நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் மீதான முத்தரப்பு தரநிலையின் கீழ் குறைந்தபட்சம் 10ல் நான்கு ஊழியர்களைக் கொண்டு வர கடப்பாடு கொண்டு இருக்கிறாரகள்.
"எந்தவோர் ஊழியரும் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்," என்றார் அமைச்சர்.
மேலும், படிப்படியாக உயரும் சம்பள அணுகுமுறை, வர்த்தகங்களும் ஊழியர்களும் நீடித்த வளர்ச்சி காண உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெவ்வேறு திறன்களைக் கொண்ட ஊழியர்களுக்கான குைறைந்தபட்ச ஊதியத்தையும் பயிற்சித் தேவைகளையும் அடைய படிப்படியாக உயரும் சம்பள முறை ஓர் ஏணியாகப் பயன்படுவதாகவும் அவர் கூறினார்.
முத்தரப்பு பங்காளித்துவத்தின் சிறப்பு குறித்து மனிதவள அமைச்சர்

