போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக நேற்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் நல்லுடல் நான்கு மணி நேரம் இறுதி அஞ்சலிக்காக இங்கு வைக்கப்பட்டு பின்னர் மலேசியாவின் ஈப்போவிற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
சின் மிங் டிரைவ் புளோக் 38ல் நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 33 வயது நாகேந்திரனின் உடலுக்கு நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பல இனம், பல சமயத்தைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர். நாகேந்திரனின் தாயாரும் அவரது உறவினர்களும் அங்கு காணப்படவில்லை.