தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்தூக்கியில் சிக்கிய மூவர் மீட்பு

1 mins read
0458a504-d701-489a-956b-dbbedb2f6e05
மின்தூக்கியில் சிக்கித் தவித்தவர்களை மின்­க­லன் மூலம் இயங்கும் இயந்­தி­ரம் பயன்­ப­டுத்தி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜங்­ஷன் 10 கடைத்­தொ­கு­தி­யில் உள்ள மின்­தூக்கி பழு­த­டைந்­த­தால் அதி­லி­ருந்து வெளியே வர முடி­யா­மல் மூவர் சிக்­கித் தவித்­த­னர்.

அவர்­களை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் பத்­தி­ர­மாக மீட்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று நிகழ்ந்­தது.

எண் 1, உட்­லண்ட்ஸ் சாலை­யில் அமைந்­துள்ள அந்­தக் கடைத்­

தொ­கு­தி­யின் இரண்­டாம் மாடிக்­கும் நான்­கா­வது மாடிக்­கும் இடையே மின்­தூக்கி பழு­த­டைந்து முடங்­கி­யது. அக்­க­டைத்­தொ­கு­தி­யில் மூன்­றா­வது மாடி­யில் மின்­தூக்­கிச் சேவை கிடை­யாது.

காலை 5.10 மணி அள­வில் இது­கு­றித்து தக­வல் கிடைத்­த­தா­கக் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

மின்­தூக்­கி­யில் மீண்­டும் மின்­சா­ரத்­தைக் கொண்டு இயக்க முடி­யாத நிலை ஏற்­பட்­ட­தால் கப்பி மற்­றும் கயிற்­றைப் பயன்­ப­டுத்தி இரண்டு அதி­கா­ரிகள் மேல் மாடி­யி­லி­ருந்து இறங்கி மின்­தூக்­கியை அடைந்­த­னர்.

சிக்கியவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற மீட்­புப் பணி­யின்­போது அவர்களுக்குப் பாது­காப்­புச்

சாத­னம் அணி­விக்­கப்­பட்­டது. பிறகு ஏணி­யைப் பயன்­ப­டுத்தி அவர்­கள் காப்­பாற்­றப்­பட்­ட­னர்.

மின்­க­லன் மூலம் இயங்கும் இயந்­தி­ரம் ஒன்­றைப் பயன்­ப­டுத்தி அவர்­கள் மேல் மாடிக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக என்று கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவமனைக்குச் செல்ல அந்த மூவரும் மறுத்துவிட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.