கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த சிங்கப்பூர் சுற்றுப்பயணியைக் காப்பாற்ற முயன்ற ஆஸ்திரேலியர்கள் இருவர் மாண்டனர்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி காலை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள கிரேட் ஓஷன் ரோடுக்கு 30 வயது திரு சஞ்சய் பாஸ்கர் சென்றிருந்தார்.
அவருடன் அவரது நண்பரும் சிங்கப்பூரருமான திரு அபினாஷ் பாலச்சந்திரன் பிள்ளையும்
சென்றிருந்தார்.
உயிர்க்காப்பாளர்கள் யாரும் இல்லை என்றும் அந்தக் கடற்
பகுதியில் நீந்துவது அபாயகர
மானது என்றும் பல எச்சரிக்கைப் பதாகைகள் இருந்தும் திரு சஞ்சய் கடலில் இறங்கினார்.
சிறிது நேரத்தில் அவரைப்
பேரலைகள் கடற்கரையிருந்து
கடலுக்குள் இழுத்துச் சென்ற
தாகத் தெரிவிக்கப்பட்டது.
உதவி தேவைப்படுவதாக திரு சஞ்சய் சைகை காட்டியும் திரு அபினாஷுக்குப் புரியவில்லை. தம்மைப் புகைப்படம் எடுக்கும்படி திரு சஞ்சய் கூறுவதாக அவர் நினைத்தார். இந்நிலையில், திரு சஞ்சய் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம் இழுத்துச்
செல்லப்பட்டார்.
நிலைமையைப் புரிந்துகொண்ட திரு அபினாஷ், காலை மணி 10.35 மணி அளவில் அவசரக்கால சேவைகளுடன் தொடர்புகொண்டு உதவி நாடினார். திரு சஞ்சய்யைக் காப்பாற்ற விரைந்த மீட்புப் பணியாளர்களில் தந்தை-மகனான 71 வயது திரு ராஸ் வில்லியம்
பவலும் 32 வயது திரு ஆண்ட்ரூ ஃபிரான்சிஸ் பவலும் இருந்தனர். இருவரும் மீட்புப் பணிக் குழுவில் தொண்டூழியர்களாகச் செயல்
பட்டனர்.
ஆனால் மீட்புப் பணியின்போது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்ட காரணத்தினால் அவர்களது விசைப்
படகு பழுதடைந்தது. அப்போது அந்த விசைப்படகில் அவர்களுடன் இன்னொருவரும் இருந்தார்.
காலை 11.25 மணி அளவில் படகு மீது பேரலை மோதியதில் அப்படகு கவிழ்ந்தது. அதில் இருந்த மூவரும் கடலில் விழுந்தனர். திரு சஞ்சய்யைக் காப்பாற்ற விரைந்த திரு ராஸ் பவலும் அவரது மகன் திரு ஆண்ட்ரூ பவலும் கடலில் மூழ்கி மாண்டனர். திரு சஞ்சய் மற்ற மீட்புப் பணியாளர்
களால் காப்பாற்றப்பட்டார்.
தந்தையும் மகனும் பயன்படுத்திய படகு நடுக்கடலில் பழுதடைந்ததாகவும் அது கவிழ்ந்ததால் இருவரும் கடலில் மூழ்கி மாண்டதாகவும் ஆஸ்திரேலிய மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்தபோது திரு ஆண்ட்ரூவின் வாழ்க்கைத் துணை கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தமது பெண் குழந்தையைப் பார்க்காமல் திரு ஆண்ட்ரூ மாண்டது, அவரது அன்புக்குரியவர்களை மீளாத் துயரில் ஆழ்த்திஉள்ளது.

