தலையில் கம்பி விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்

வேலையிடத்தில் எஃகு கம்பி தலையில் விழுந்து பங்களாதே‌ஷ் ஊழியர் உயிரிழந்தார். எஃகு கம்பிகளை இடமாற்றம் செய்துகொண்டிருந்தபோது நேற்று அசம்பாவிதம் ‌ஏற்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

சம்பவத்தின் தொடர்பில் கவனகுறைவாக நடந்ததற்காக 49 ஆடவர் கைதுசெய்யபட்டார். மாண்டவருக்கும் கைதுசெய்யப்பட்டவருக்கும் என்ன தொடர்பு போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

உயிரிழந்த 42 வயதான ஊழியர் எஃகு கம்பிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக அவற்றை அடுக்கிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக மனிதவள அமைச்சு கூறியது.

சம்பவம் குறித்து காவல் துறைக்கு மாலை சுமார் 1.55 மணியளவில் அழைப்பு கிடைத்தது. ஊழியர் சம்பவ இடத்திலே மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர்.

எஃகு கம்பிகளை நகர்த்தும் பணியை உடனடியாக நிறுத்தும்படி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் மாண்டனர். இந்த மாதம் மொத்தம் ‌ஏழு பணியிட மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!