பசிஃபிக் தீவு நாடான துவாலுவின் பிரதமர் கௌசீ நடானோ முதல்முறையாக அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ளார்.
இஸ்தானாவில் நேற்று அவர் சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்துப் பேசினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைத் தலைவர்கள் இருவரும் மறுஉறுதிப்படுத்தினர்.
அதிகரிக்கும் கடல்மட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் உலகின் கவனத்தை ஈர்த்து வரும் மிகச் சிறிய நாடு துவாலு.
கடல்மட்டம் உயர்ந்தால் அதன் சில பகுதிகள் மூழ்க நேரிடும்; எஞ்சியவை குடியிருக்க உகந்தவையாக இல்லாமல் போகக்கூடும். ஆகவே கடல்மட்ட உயர்வைத் தடுக்கும் நடவடிக்கைகளை அது மேற்கொள்கிறது.
பிரதமர் நடானோவைச் சந்திப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகத் திரு லீ ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். துவாலு உள்ளிட்ட பசிஃபிக் தீவு நாடுகளின் மேம்பாட்டுக்கு சிங்கப்பூர் ஆதரவு தரும் என்றும் அவர் தம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

