தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம்: ஏமாற்றியோரின் பெயர்களை வெளியிடாவிட்டால் அனைவரின் மீதும் களங்கம் ஏற்படும்

தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம்: ஏமாற்றியோரின் பெயர்களை வெளியிடாவிட்டால் அனைவரின் மீதும் களங்கம் ஏற்படும்

1 mins read
d444e8c5-84cb-4240-9839-b1828d8ca4d0
-

வழக்­க­றி­ஞர் தேர்­வில் ஏமாற்­றிய ஆறு பேரின் பெயர்­களை வெளி­யி­டா­மல் இருந்­தால் அது அந்த ஆண்­டின் தேர்வை எழு­திய மற்­ற­வர்­கள் மீதும் களங்­கத்தை ஏற்­படுத்­தும் என்று அர­சாங்­கத் தலை­மைச் சட்ட அலு­வ­ல­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

2020ஆம் ஆண்­டின் வழக்­கறிஞர் தேர்வை எழு­தி­யோ­ரில் ஆறு பேர் ஏமாற்­றி­னர். முத­லில் அவர்­க­ளின் பெயர்­களை வெளி­யி­ட­ வேண்­டாம் என்று உத்­த­ர­விடப்­பட்­டது. அதற்­குப் பிறகு அந்த உத்­தரவை மீட்­டுக்­கொள்­ளு­மாறு உயர் நீதி­மன்­றத்­தி­டம் கூறி­ய­தற்­கான கார­ணத்­தைக் கேட்­ட­போது அர­சாங்­கத் தலை­மைச் சட்ட அலு­வ­ல­கம் விளக்­கம் அளித்­தது.

சம்­பந்­தப்­பட்ட ஆறு பேரும் பிற்­கா­லத்­தில் பார­பட்­சத்­து­டன் நடத்­தப்­ப­டா­மல் இருக்க அவர்­க­ளின் பெயர்­களை வெளி­யி­ட­வேண்­டாம் என்று நீதி­பதி சூ ஹான் தெக் முத­லில் உத்­த­ர­விட்­டார். அந்த தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைக் காக்க, அவர்­க­ளின் ஆவ­ணங்­கள் உள்ள கோப்­பு­களை அதி­கா­ர­பூர்­வ­மாக மூடி­வைக்­கு­மா­றும் கூறி­யி­ருந்­தார்.

அதற்­குப் பிறகு தமது முடிவை மாற்­றிக்­கொண்ட நீதி­பதி சூ, தேர்­வில் ஏமாற்­றி­யோ­ரின் பெயர்­களை நேற்று வெளி­யிட்­டார்.

திருவாட்டி மோனிஷா தேவராஜ், திரு குஷல் அத்துல், திரு ஸ்ரீராம் ரவீந்திரன், திரு மேத்தியூ சோவ், திரு லயனல் சூங் யூங், திருவாட்டி லின் குவெக் யீ டிங் ஆகியோர் வழக்கறிஞர் தேர்வில் ஏமாற்றிய ஆறு பேர்.