540,000 பேருக்கு $200 எடுசேவ் தொகை

540,000 பேருக்கு $200 எடுசேவ் தொகை

1 mins read
166dfda3-5c9c-4171-bb5b-cec62120fe0e
குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

அரை மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட சிங்­கப்­பூர் சிறு­வர்­களும் இளையர்களும் தங்­கள் எடுசேவ் அல்­லது உயர்­நி­லைக் கல்விக்­குப் பிந்­திய கணக்­கு­களில் 200 வெள்ளி தொகையை அடுத்த மாதம் பெறு­வார்­கள்.

ஏழு வய­துக்­கும் இரு­பது வய­துக்­கும் இடைப்­பட்ட சுமார் 540,000 பேருக்கு இந்தத் தொகை அளிக்­கப்­படும் என்று நிதி அமைச்­சும் கல்வி அமைச்­சும் வெளி­யிட்ட கூட்­டறிக்­கை­யில் தெரி­வித்­தன.

இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. இதோடு பிள்­ளை­க­ளின் எடு­சேவ் கணக்­கு­களில் அர­சாங்­கம் ஒவ்­வோர் ஆண்­டும் செலுத்­தும் தொகை­யைத் தவிர்த்து தனி­யாக இத்­தொகை வழங்­கப்­ப­டு­கிறது.

பள்ளிக் கட்டணங்கள், செறிவூட்டல் வகுப்புகள், மின்னிலக்கக் கற்றலுக்காகக் கணினி வாங்குவது போன்ற செலவுகளுக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிள்ளைகளின் கணக்­கு­களில் நேர­டி­யாக இத்­தொகை செலுத்­தப்­படும் என்­றும் அத­னைப் பெற அவர்­கள் தரப்­பில் எந்த நட­வ­டிக்­கை­யும் தேவை­யில்லை என்று தெரிவிக்கப்பட்டது.