நான்கே மாதங்களில் 6,000 டெங்கிச் சம்பவங்கள்

நான்கே மாதங்களில் 6,000 டெங்கிச் சம்பவங்கள்

1 mins read
30a74323-9f3e-4f6c-b2ec-a7e870acecf2
ஆண்­டின் நடுப்­ப­கு­திக்­கும் அக்­டோ­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலத்­தில்­தான் அதி­க­மான டெங்கி தொற்­றுச் சம்­ப­வங்­கள் இடம்­பெ­றும். இவ்­வாண்டு அதற்கு முன்­னரே அதி­க­மான சம்­ப­வங்­கள் பதி­வாகியுள்ளன. (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்) -

சிங்கப்பூரில் டெங்­கி தொற்­றுப் பாதிப்பு வேக­மாக அதி­க­ரித்து வரு­விறது. நான்கே மாதங்களில் 6,000 சம்பவங்கள் பதிவாகின.

இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு முழுவதும் பதிவான எண்ணிக்கையைவிட அதிகம். சென்றாண்டு 5,258 பாதிப்புகள் உறுதிசெய்யப்ப்டடதாகத் தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தெரிவித்தது.

டெங்கி தொற்று பொதுவாக ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் உச்சமடையும். இம்முறை அதற்கு முன்னதாகவே டெங்கி பாதிப்பு அதிகரித்திருபபதாக வாரியம் குறிப்பிட்டது.

ஏப்ரல் 26ஆம் தேதி நிலவரப்படி, டெங்கி அபாயமுடைய 193 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெங்­கிக்கு எதி­ரான போராட்­டத்­தில் அனை­வ­ரும் பங்­காற்­ற­வேண்­டும் என்று வாரியம் கேட்டுகொண்டது. கொசுக்­கள் இனப்­பெ­ருக்­கத்­தில் ஈடு­ப­டா­மல் இருக்க வீடு­களை சுத்­த­மாக வைத்­தி­ருக்கு­மாறு அது குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு நினை­வூட்­டி­யது.