உற்பத்தித் துறையில் நம்பிக்கை குறைவு

உற்பத்தித் துறையில் நம்பிக்கை குறைவு

2 mins read
2a88e7c5-18c5-4dbc-a16c-3c7b0c970ecd
சிங்கப்பூரில் உள்ள ஓர் உற்பத்தி ஆலை. கோப்புப் படம்: சாவ்பாவ் -

உக்­ரேன் நில­வ­ரத்­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் பொது­வாக உற்­பத்­தித் துறை நிறு­வ­னங்­கள் வருங்­கா­லத்­துக்­கான வர்த்­த­கம் சார்ந்த எதிர்­பார்ப்­பு­க­ளைக் குறைத்­துக்­கொண்டுள்­ளன.

உற்­பத்­தித் துறை­யில் இரண்டு விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள், இவ்­வாண்டு முதல் காலாண்டு நில­வரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இம்­மாதத்­திற்­கும் செப்­டம்­பர் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் வர்த்­த­கம் செய்­வ­தற்­கான சூழல் மேம்­பட்­டி­ருக்­கும் என்று கரு­து­கின்றன. பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம், 'சிங்ஸ்­டேட்' எனப்­படும் சிங்­கப்­பூர் புள்ளி விவ­ரப் பிரிவு ஆகிய இரு அமைப்­பு­களும் நடத்­திய கருத்­தாய்­வு­க­ளின் ஒன்­றிணைக்­கப்­பட்ட முடி­வு­களில் இது தெரி­ய­வந்­துள்­ளது. கடந்த ஜன­வரி மாதம் நடத்­தப்­பட்ட கருத்­தாய்­வில் இந்த விகி­தம் எட்­டா­கப் பதி­வானது.

உக்­ரேன் போரால் உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்­கான செயல்­பாட்டுச் செலவு கூடி­யுள்­ளது. இத்­தகைய கார­ணங்­க­ளால் உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்­கி­டையே நம்­பிக்கை குறைந்­துள்­ளது.

எனி­னும், கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் என்ற எதிர்­பார்ப்பு அதி­கம் இருந்­த­தைத் தொடர்ந்து சேவைத் துறை­யில் நிறு­வ­னங்­க­ளுக்­கி­டையே நம்­பிக்கை கூடி­யி­ருந்­தது.

அடுத்த ஆறு மாதங்­களில் வர்த்­த­கச் சூழல் தங்களுக்குச் சாத­க­மாக இருக்­கும் என்று 15 விழுக்­காட்டு சேவைத் துறை நிறு­வனங்­கள் நம்­பு­கின்­றன. முந்­தைய கருத்­தாய்­வில் பதி­வான 14 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் இது சற்று அதி­கம்.

கடந்த மார்ச் மாதத்­துக்­கும் இந்த மாத நடுப்­ப­கு­திக்கும் இடைப்­பட்ட காலத்­தில் கருத்­தாய்வு நடத்­தப்­பட்­ட­தா­கப் புள்ளி விவ­ரப் பிரிவு தெரி­வித்­தது.

இந்தக் கால­கட்­டத்­தில்­தான் அர­சாங்­கம் பல பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் உள்­ளூர் கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­களை­யும் பெரிய அள­வில் தளர்த்­தி­யது.

உற்­பத்­தித் துறை­யில் போக்­கு­வரத்­துப் பொறி­யி­யல் நிறு­வ­னங்­கள்­தான் ஆக அதிக நம்­பிக்­கை­யைக் கொண்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது. 33 விழுக்­காட்­டுப் போக்­கு­வ­ரத்­துப் பொறி­யி­யல் நிறு­வ­னங்­கள் வர்த்­த­கச் சூழல் மேம்­பட்­டி­ருக்­கும் என்று நம்­பு­கின்­றன.

ரஷ்ய-உக்­ரேன் பூச­லால் கச்சா எண்­ணெ­யின் விலை அதி­க­ரித்து வரு­கிறது. ஆகையால் அதன் தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­கள் சூடு­பி­டிக்­கும் என்று கடல்­துறை, கட­லோ­ரப் பொறி­யி­யல் துறை­யில் உள்ள நிறு­வ­னங்­கள் கரு­து­கின்றன.