சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், சிங்கப்பூரில் விரிவுபடுத்தப்பட்டுள்ள அதன் அலுவலகத்தின் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது. செல்வந்தர் எலன் மஸ்க் அந்நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
'கேப்பிட்டகிரீன் டவர்' கட்டடத்தில் அமைந்துள்ள விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டரின் அலுவலகம் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படவிருந்தது. புதிய பகுதியின் பரப்பளவு 22,000 சதுர அடி.
திறப்பு நிகழ்ச்சியில் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கலந்துகொள்ளவிருந்தார். சிங்கப்பூரில் உள்ள டுவிட்டரின் அலுவலகம், ஆசிய பசிபிக் வட்டாரத்துக்கான அதன் மையமாக விளங்குகிறது.

