தட்சிணாமூர்த்திக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒத்திவைப்பு

தட்சிணாமூர்த்திக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒத்திவைப்பு

2 mins read
96e22e1a-364a-49f9-a8d5-bb5519bfc6be
-

சிங்­கப்­பூ­ருக்­குள் போதைப்­பொ­ருள் கடத்­திய குற்­றத்­துக்­காக மலே­சி­ய­ரான 36 வயது தட்­சி­ணா­மூர்த்தி கந்­தை­யா­வுக்கு விதிக்­கப்­பட்ட மரண தண்­டனை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று தூக்­கி­லி­டப்­பட இருந்த தட்­சி­ணா­மூர்த்தி, தலை­மைச் சட்ட அதி­கா­ரிக்கு எதி­ராக வழக்கு தொடுத்­துள்­ளார்.

அந்த வழக்கு இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது. தட்­சி­ணா­மூர்த்­தி­யு­டன் வேறு சில மரண தண்­டனை கைதி­களும் தலை­மைச் சட்ட அதி­கா­ரிக்கு எதி­ராக இந்த வழ­க்­கைத் தொடுத்­துள்­ள­னர்.

இந்த வழக்கு முடி­யும்­வரை தமக்கு விதிக்­கப்­பட்ட மரண தண்­ட­னையை ஒத்­தி­வைக்க தட்­சி­ணா­மூர்த்தி விடுத்த கோரிக்­கையை மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் ஏற்­றது. தட்­சி­ணா­மூர்த்­தி­யின் இந்­தக் கோரிக்­கை­யைத் தள்­ளு­படி செய்ய தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் செய்த மேல்­மு­றை­யீட்டை நீதி­மன்­றம் ஏற்க மறுத்­தது.

தாங்­கள் எழு­திய தனிப்­பட்ட கடி­தங்­கள் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் நகல் எடுக்­கப்­பட்டு தலை­மைச் சட்ட அதி­கா­ரிக்கு அனுப்­பப்­ப­டு­வ­தாக 2020ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் தட்­சி­ணா­மூர்த்தி நீதி­மன்­றத்­தில் முறை­யிட்­டார்.

அந்த நகல்­களை தலை­மைச் சட்ட அதி­கா­ரி­ அலு­வ­ல­கம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தில் அழித்ததாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டும்­போது சட்­டத்­துக்­குப் புறம்­பான அணு­கு­முறை கையா­ளப்­ப­டு­வ­தாக எழுந்த குற்­றச்­சாட்டு தொடர்­பான விசா­ரணை முடி­யும் வரை தங்­கள் மரண தண்­ட­னையை ஒத்­தி­வைக்­கும்­படி அதே ஆண்டு ஜன­வரி மாதத்­தில் தட்­சி­ணா­மூர்த்தி ­யும் மற்­றொரு சிறைக் கைதி­யான கோபி அவி­டி­ய­னும் நீதி­மன்­றத்­தைக் கேட்­டுக்­கொண்­ட­னர். ஆனால் அவர்­க­ளது கோரிக்­கையை மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது.

கைதி­க­ளின் அனு­மதி அல்­லது நீதி­மன்ற உத்­த­ர­வின்றி கைதி­

க­ளின் தனிப்­பட்ட கடி­தங்­களைச் சிறை அதி­கா­ரி­கள் நகல் எடுத்து தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­துக்கு அனுப்­பக்­கூ­டாது என்று நீதி­மன்­றம் கூறி­யது.

ஆனால் தட்­சி­ணா­மூர்த்தி, கோபி ஆகி­யோ­ரின் கடி­தங்­கள் தொடர்­பில் அதி­கா­ரி­கள் தவ­றான முறை­யில் நடந்­து­கொண்­டதை நீதி­மன்­றம் ஏற்­றுக்­கொண்­டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாதிக்­கப்­பட்ட தட்­சி­ணா­மூர்த்­தி­யும் 12 சிறைக் கைதி­களும் தலை­மைச் சட்ட அதி­கா­ரிக்கு எதி­ராக வழக்கு தொடுத்­த­னர்.

தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­க­மும் சிங்­கப்­பூர் சிறைத் துறையும் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் நடந்­து­கொண்­ட­தாக நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளிக்க வேண்­டும் என்று கைதிகள் தெரி­வித்­த­னர்.

நம்­பிக்­கைக்கு இழுக்கு ஏற்­படும் வகை­யில் நடந்­து­கொண்­ட­தற்­கும் பதிப்­பு­ரிமை மீற­லுக்­கும் இழப்பு கோரப்­பட்­டது.

இந்த விண்­ணப்­பம் மூன்று மாதம் கழித்து மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. அதற்­கான செலவை ($10,000) கைதி­க­ளின் அப்­போ­தைய வழக்­க­றி­ஞர் எம். ரவி ஏற்க வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.