வழக்கில் தோல்வியடைந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை; குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டும் பொருந்தும்

1 mins read
a29d37d2-1992-4cca-b10c-00362608029a
-

வழக்­கில் வெற்றி பெற­வில்லை என்­றால் வழக்­க­றி­ஞ­ருக்­கான கட்­ட­ணத்­தைச் செலுத்த தேவை­யில்லை என்ற ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­தி­டு­வது குறித்து வரும் மே மாதம் 4ஆம் தேதி முதல் சம்­பந்­தப்­பட்ட வழக்­க­றி­ஞர்­களும் அவர்­க­ளது கட்­சிக்­கா­ரர்­களும் கலந்­து­ரை­யாடி முடி­வுக்கு வர­லாம்.

இது குறிப்­பிட்ட சில வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு மட்­டுமே பொருந்­தும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இதற்கு முன்பு இத்­த­கைய அணு­கு­மு­றைக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

தற்­போ­தைக்கு அனைத்­து­லக, உள்­ளூர் சம­ரச வழக்­கு­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் அனைத்­து­லக வர்த்­தக நீதி­மன்­றத்­தில் நடை­பெ­றும் குறிப்­பிட்ட சில வழக்­கு­க­ளுக்­கும் இவற்­று­டன் தொடர்­பான நீதி­மன்ற,

சம­ரச வழக்­கு­க­ளுக்­கும் இந்தப்

புதிய அணு­கு­மு­றை­யைப் பயன்

படுத்­த­லாம்.

இத்­த­கைய வழக்­கு­கள் பெரும்­பா­லும் அதிக மதிப்­புள்ள வர்த்­தக உடன்­பா­டின்­மை­யு­டன் தொடர்­

பா­னவை.

புதிய கட்­ட­மைப்பு தொடர்­பான வழி­காட்­டி­நெ­றி­முறை தயா­ரிக்­கப்

­ப­டு­வ­தாக வழக்­க­றி­ஞர் மன்றம் தெரிவித்தது.