பாட்டாளிக் கட்சி அதன் மே தின அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் குறைந்தபட்ச வருமான முறையைச் செயல்படுத்துவது போன்ற விவகாரங்களைப் பாட்டாளிக் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
கொவிட்-19 தொடர்பிலான ஆக மோசமான கட்டத்தைத் தாண்டிவிட்டாலும் அதிகரித்துவரும் பொருள்கள் விலை குறித்த கவலைகளை அக்கட்சி தனது அறிக்கையில் முன்வைத்தது.
இதற்கிடையே, பிரதமர் லீ சியன் லூங் இன்று தமது மே தின உரையை ஆற்றுவார்.

