தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதல் மோசடிக் கும்பல்களைப் பிடித்த இருநாட்டுக் காவல்துறை

1 mins read
a70b6b57-aeb5-4436-9c92-3ff634eb8098
-

சிங்­கப்­பூர், மலே­சியா ஆகிய இரு­நாடுகளின் காவல்­து­றை­யி­ன­ரும் இணைந்து காதல் மோச­டிச் செயல்­களை மேற்­கொண்ட இரண்டு கும்­பல்­க­ளைப் பிடித்­துள்­ள­னர். இது, இரு­நாட்­டுக் காவல்­து­றை­யி­ன­ரும் இவ்­வாண்டு இணைந்து வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டுள்ள முதல் முறி­ய­டிப்பு நட­வ­டிக்கை.

இணை­யம்­வழி மேற்­கொள்­ளப்­பட்ட காதல் மோச­டிச் செயல்­களால் தாங்­கள் ஏமாற்­றப்­பட்­ட­தாக இரு பெண்­கள் புகார் கொடுத்­த­தைத் தொடர்ந்து இந்­நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் காவல்­துறை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த இரு பெண்­க­ளுக்­கும் 46 வயது. அவர்­களில் ஒரு­வர் 15,000 வெள்­ளியை இழந்­தார். மற்­றொரு­வர் 20,000 வெள்­ளி­யைப் பறி­கொ­டுத்­தார்.

ஒரு பெண் இவ்­வாண்டு மார்ச் மாதம் காவல்­து­றை­யி­டம் புகார் கொடுத்­தி­ருக்­கி­றார். மற்­றொ­ரு­வர் சென்ற ­மா­தம் புகார் அளித்­தார்.

ஏமாற்­றுக்­கா­ரர்­க­ளைப் பிடிக்க சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரிவு, மலே­சி­யா­வின் வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரி­வு­டன் இணைந்து செயல்­பட்­டது. காதல் மோச­டிச் செயல்­களை மேற்­கொண்ட ஏமாற்­றுக்­கா­ரர்­கள் மலே­சி­யா­வில் இயங்கி­யது தெரி­ய­வந்தது.

சென்ற மாதம் 22, 23ஆம் தேதி­களில் சிலாங்­கூர், கோலா­லம்­பூர் ஆகிய பகு­தி­களில் இருக்­கும் இரண்டு அடுக்­கு­மாடி வீடு­களில் அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர். சோதனையில் ஆப்­பி­ரிக்­கா­வைச் சேர்ந்த ஆறு ஆட­வர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

கைதானோர் 28லிருந்து 40 வய­துக்கு உள்­பட்­ட­வர்­கள்.