பிரித்தம், ஃபைசல் தொடர்பில் காவல்துறை விசாரணை

பிரித்தம், ஃபைசல் தொடர்பில் காவல்துறை விசாரணை

1 mins read
da179b99-6a36-4b11-a27c-2a4665c96b7f
சிங்கப்பூரின் எதிர்கட்சித் தலைவரான திரு பிரித்தம் சிங் (இடது), திரு ஃபைசல் மானப். படங்கள்: gov.sg -
multi-img1 of 2

நாடா­ளு­மன்­றச் சலு­கை­கள் குழு விசா­ர­ணை­யில் பாட்­டா­ளிக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பிரித்­தம் சிங், ஃபைசல் மானப் ஆகி­யோ­ரின் நடத்தை குறித்து விசா­ரிக்க காவல்­து­றை­யி­னர் சம்­பந்­தப்­பட்­டோ­ரைத் தொடர்­பு­கொள்­வர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து நாடா­ளு­மன்­றம் சமர்ப்­பித்த ஆதா­ரத்தை காவல்­துறை ஆய்வு செய்து முடித்­துள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

பாட்­டா­ளிக் கட்­சி­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கான் பொய் சொன்ன விவ­கா­ரத்­தின் தொடர்­பில் திரு ஃபைசல், எதிர்­கட்­சித் தலை­வரான திரு சிங் ஆகி­யோர் மீது அர­சாங்க வழக்­க­றி­ஞர் மேலும் விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­குச் சாத­க­மாக நாடா­ளு­மன்­றம் வாக்­க­ளித்­தது.

அதைத் தொடர்ந்து காவல்­துறை இந்­ந­ட­வ­டிக்­கையை எடுக்­கிறது.