சிங்கப்பூரில் வசிக்கும்போது வீட்டிலிருந்து இங்குள்ள வேலையிடங்களுக்குச் செல்வதற்கான நேரம் பெரிய அளவில் மிச்சமாகும். இருந்தாலும் அதற்குப் பதிலாக சிங்கப்பூரில் வேலை செய்யும் ஜோகூரைச் சேர்ந்த ஊழியர்கள் தினமும் மலேசியாவிலிருந்து பயணம் மேற்கொள்ள விரும்புவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் அதிகமான வாழ்க்கைச் செலவினம், குடும்பத்தாருடன் வாழ விரும்புவது போன்றவை அதற்குக் காரணங்கள் என்று அவர்கள் கூறினர்.
சென்ற மாதம் முதல் தேதியிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கட்டுப்பாடுகளின்றி சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தரைவழிப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு முதல் இரண்டு வாரங்களிலேயே சுமார் 663,000 பேர் காஸ்வே கடற்பாலம் வழியாகவும் துவாஸ் இரண்டாம் இணைப்பு வாயிலாகவும் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் மேற்கொண்டனர்.

