பாயா லேபார் டாக்சி நிறுத்துமிடத்தில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதன் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ஆடவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதைக் காட்டும் காணொளிகள் செவ்வாய்க்கிழமை (மே 3) இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
தரையில் விழுந்துகிடந்த ஒருவரை ஐந்து பேர் அடிப்பது ஒரு காணொளியில் தெரிகிறது. மற்றொரு காணொளியில் ஒரு கும்பல் இன்னொரு கும்பலைத் துரத்துவது தெரிகிறது.
கைகலப்பு குறித்து காவல் துறைக்கு மாலை சுமார் 7.30 மணியளவில் அழைப்பு வந்தது.
இந்தக் குறிப்பிட்ட இடத்தில் கும்பல்கள் சண்டை போட்டுக்கொள்வது இது முதல்முறை அல்ல.