உரிமம் இல்லாமல் கடன் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட
தாகச் சந்தேகிக்கப்படும் 132 பேரிடம் காவல்துறையினர்
விசாரணை நடத்துகின்றனர்.
சந்தேக நபர்கள் 18 வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தீவெங்கும் நடத்தப்பட்ட அதிரடிச்
சோதனையில் சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
பிடிபட்ட சந்தேக நபர்களில் மூவர் கடன் வாங்கியவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்
களுக்குத் தொல்லை விளைவித்ததாகக் கூறப்படுகிறது.
உரிமம் இல்லாமல் கடன் கொடுத்த குற்றம் தொடர்பில் தானியங்கி வங்கி இயந்திரம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ததாக 14 பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
எஞ்சியுள்ள 115 பேர் உரிமம் இல்லாமல் கடன் கொடுப்பவர்
களுக்கு உதவும் வகையில்
வங்கிக் கணக்குகளைத் திறந்ததாக நம்பப்படுகிறது.
உரிமம் இல்லாமல் கடன் கொடுப்பவர்களுக்கு உதவுவோருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது $30,000லிருந்து $300,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அவர்களுக்கு அதிகபட்சம் ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் கடன் கொடுப்பவர் சார்பாகச் செயல்
படுபவர்களுக்கும் கடன் வாங்கி யவர்களுக்குத் தொல்லை விளைவிப்போருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை, $5,000லிருந்து $50,000 வரை அபராதம்,
மூன்றிலிருந்து ஆறு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

