சிங்கப்பூரில் ஜூன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை ஷங்ரிலா ஆசிய பாதுகாப்பு உச்சநிலை மாநாடு நடக்கிறது.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஆயத்தப் பணிகளைச் செய்துவருகிறார் என்று ஜப்பானின் நிக்கெய் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் தற்காப்பு அரண் பற்றிய புரிந்துணர்வைப் பேணி வளர்க்கும் நோக்கத்தில் அவர் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புகிறார்.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்து இருக்கிறது. சீனா கடல் பகுதியில் கெடுபிடியாக நடந்து கொள்கிறது. இந்தச் சூழலில் மேற்கத்திய மற்றும் ஆசிய தற்காப்பு அதிகாரிகள் அனைத் துலக அளவில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் கிஷிடா கோரிக்கை விடுத்தார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே 2014 ஆம் ஆண்டில் அந்த பாதுகாப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டார்.
அதற்குப் பிறகு முதல் முறையாக ஜப்பானிய பிரதமர் இப்போது ஷங்ரிலா உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

