அடுத்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 15,000 உள்ளூர்வாசிகள் வேலை தேடும் படலத்தைத் தொடங்குவர் என்றும் இவர்களை வேலையில் அமர்த்துவது குறித்து தற்போது ஊழியர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் பரிசீலிக்கலாம் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலையை முன்னிட்டு பாதுகாப்பு இடை
வெளித் தூதர்கள், தடுப்பூசி நிலைய ஊழியர்கள் போன்ற
குறுகிய கால பணிகளில் வேலை செய்து வரும் ஏறத்தாழ 5,200 பேரின் வேலை ஒப்பந்தம் முடிய இருப்பதால் அவர்கள் புதிய வேலையைத் தேடுவர் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று கூறினார்.
வேலை தேட இந்த ஊழியர்
களுக்கு சிங்கப்பூர் ஊழியரணியும் என்டியுசியின் வேலை வாய்ப்பு, வேலை நியமனக் கழகமும்
ஆதரளிக்கின்றன.
இந்த ஊழியர்களில் பலர் உணவு மற்றும் பானத் துறை, சில்லறை வர்த்தகத் துறை ஆகியவற்றில் பணிபுரிந்தவர்கள்.
எனவே அத்துறைகள் சம்பந்தமாக அவர்களுக்குத் தகுந்த திறன்களும் அனுபவங்களும் இருப்பதாக டாக்டர் டான் கூறினார்.
கடந்த பிப்ரவரி இறுதி நில
வரப்படி எஸ்ஜியுனைடெட் வேலைகள், திறன்கள் தொகுப்புத் திட்டத்தின்கீழ் 9,800 பேர் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு ஏற்ற வேலையைத் தேடித் தர டாக்டர் டானின் தலைமையின்கீழ் இயங்கும் வேலைகள் பணிக்குழு துறைசார்
முகவைகளுடன் இணைந்து செயல்
படுகிறது. கொவிட்-19 நெருக்கடிநிலையை முன்னிட்டு குறுகிய வேலைகளில் இருந்த மேலும் 1,200 பேர் நீண்டகால வேலைகளில் அமர்த்தப்படுவர் என நாடாளுமன்றத்தில் டாக்டர் டான் தெரிவித்தார். நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கூடுதல் உள்ளூர்வாசிகளை நிறுவனங்கள் ஈர்க்கலாம் என்றார் டாக்டர் டான்.