தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முழுநேர தேசிய சேவையாளர்கள் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியதில்லை

2 mins read
81c31af1-a58c-4a55-af0e-1a67ef880a27
-

முழு­நேர தேசிய சேவை­யா­ள­ராக சேர இம்­மா­தம் 15ஆம் தேதி முதல் பதி­வு­செய்­வோர் தங்­க­ளது தேசிய பதிவு அடை­யாள அட்­டையை (என்­ஆர்­ஐசி) சமர்ப்­பிக்­கத் தேவை இல்லை என்று தற்­காப்பு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

தற்­போ­தைய நடை­மு­றை­யின்­படி, முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­களும் ஆயு­தப் படை­யி­ன­ரும் தங்­க­ளது அடை­யாள அட்­டை­யைக் கொடுத்­து­விட்டு 11B எனப்­படும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் ராணுவ அடை­யாள அட்­டை­யைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டும்.

அடை­யாள அட்­டை­யின் பாது­காப்பு கருதி மே 15 முதல் இந்த நடை­மு­றை கைவி­டப்­ப­டு­கிறது.

ராணுவ அடை­யாள அட்டை சிங்­கப்­பூர் ஆயு­தப்படை­யின் சேவை வீரர் என்­ப­தற்­கான அடிப்­படை ஆதா­ரப் பத்­தி­ரம் என்­ப­தால் அது வழங்­கு­வது தொட­ரும் என்று அமைச்சு கூறி­யுள்­ளது.

புதி­ய­வர்­க­ளி­டம் அடை­யாள அட்டை வாங்­கு­வது நிறுத்­தப்­ப­டு­கிற அதே­நே­ரம் தற்­போது சேவை­யில் உள்ள முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­க­ளின் அடை­யாள அட்­டை­யும் அவர்­க­ளின் மனி­த­வள அலு­வ­லகங்­கள் மூல­மாக கட்­டம் கட்­ட­மா­கத் திருப்­பித் தரப்­படும்.

அடையாள அட்­டை­யைத் திருப்­பித் தரும் பணி நவம்­பர் மாதத்­திற்­குள் முடி­வ­டை­யும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

உள்­துறை அமைச்­சும் தனது உள்­துறை குழு­வில் முழு­நேர தேசிய சேவை­யா­ள­ராக இம்­மா­தம் முதல் சேரு­வோ­ரி­டம் அடை­யாள அட்டை பெறு­வதை நிறுத்­திக்­கொள்­வ­தாக அறி­வித்துள்­ளது. சிங்­கப்­பூர் காவற்­படை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஆகி­யவற்றின் சேவை யாளர்களுக்கு தேசிய சேவை­யா­ளர் அடை­யாள அட்டை வழங்­கு­வது தொட­ரும். ஏற்­கெ­னவே பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட தேசிய பதிவு அடை­யாள அட்­டையை (என்­ஆர்­ஐசி) கட்­டம் கட்­ட­மா­கத் திருப்­பித் தரப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

முழு­நேர தேசிய சேவை­யா­ள­ரா­க­வும் ஆயு­தப் படை வீர­ரா­க­வும் சேரு­வோர் தங்­க­ளது அடை­யாள அட்­டையை சமர்ப்­பிக்க வேண்­டும் என்­னும் நடை­முறை, தேசிய சேவை அறி­மு­கம் செய்­யப்­பட்ட 1967ஆம் ஆண்டு முதல் நீடித்து வரு­கிறது. கடந்த 55 ஆண்டுகளில் மில்லிய னுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர் களும் நிரந்தரவாசிகளும் தங்களது தேசிய சேவைக் கடைமையை நிறை வேற்றியுள்ளனர்.