நாட்டின் மக்கள்தொகையை 2030ஆம் ஆண்டுக்குள் பத்து மில்லியனாக உயர்த்த சிங்கப்பூர்
திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது கூறியது. 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தேர்தல் விவாதத்தின்போது அக்கட்சியின் தலைவர் சீ சூன் ஜுவான் இவ்வாறு கூறினார். இந்தச் செய்தி உண்மையல்ல என்று தெரிந்தும் அக்கட்சி அவ்வாறு கூறியது என உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
பொஃப்மா எனப்படும் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், பொய்ச் செய்திக்கான திருத்தத்தைப் பதிவிடுமாறு சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கு 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதியன்று உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அக்கட்சி மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், கட்சியின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
அத்துடன், வழக்கிற்கான செலவுகளையும் இதர செலவுகளையும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஏற்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடம் பணத்தைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்
பட்டது.