சிங்கப்பூரில் அண்மையில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது கிருமித்தொற்றின் புதிய அலை அல்ல என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
"இதன் காரணமாக, சிங்கப்பூரர்கள் கவலைப்படத் தேவையில்லை. இதனால் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. பெரும்பாலான தொற்று சம்பவங்கள் கடுமையற்றவை. அவற்றை வீட்டிலேயே அவற்றைக் குணப்படுத்திவிடலாம்," என்று அவர் மேலும் கூறினார்.

