வழக்கறிஞரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான 57 வயது லிம் தியன் மீது பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
நம்பிக்கை மோசடிக் குற்றம், சட்டவிரோதமாகப் பின்தொடர்தல், தகுந்த சான்றிதழ் இல்லாமல் வழக்கறிஞராகச் செயல்பட்டது ஆகியவை தொடர்பாக அவர்
குற்றம் சுமத்தப்பட்டார்.
லிம் தியன் தற்போது கார்சன் சட்ட நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பதை சட்ட அமைச்சின் இணையத்தளம் குறிப்பிடுவதாகஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதிக்கும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் லிம் தியன் நம்பிக்கை மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரி வித்தன.
வாகன விபத்து தொடர்பாக அவரது கட்சிக்காரருக்கு $30,000 இழப்பீடு வழங்கப்பபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
லிம் தியனை நம்பி அந்தத் தொகை அவரிடம் கொடுக்கப்பட்டது.
ஆனால் அப்பணத்தை லிம் தியன் கையாடியதாகக்
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் முன்னாள் பெண் ஊழியரை அவர் சட்ட
விரோதமாகப் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
முறையற்ற குறுஞ்செய்திகளை லிம் தியன் அவருக்கு அனுப்பி சங்கடப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதிக்கும் ஜூன் மாதம் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தகுந்த சான்றிதழ் இல்லாமல் லிம் தியன் வழக்கறிஞராக சட்ட சேவைகளை வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியன்று 'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையப்பக்கத்தின் ஆசிரியரான டெரி சூ என்றழைக்கப்படும் சூ யுவான்சென்னை லிம் தியன் பிரதிநிதித்தார்.
அந்த இணையப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த அறிக்கை களுக்கு எதிராகப் பிரதமர் லீ சியன் லூங் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் லீக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் $210,000 வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லிம் தியன் நேற்று $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்குக்கு முந்திய கலந்
துரையாடல் வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதியன்று நடைபெறும்.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் லிம் தியனுக்கு ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சம் 20 ஆண்டுகளுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
சட்டவிரோத பின்தொடர்தல் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
தகுந்த சான்றிதழ் இல்லாமல் சட்ட சேவை வழங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் $25,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

