பழிவாங்கும் எண்ணத்துடன் தம்முடன் ஒரே வீட்டில் வசித்தவரின் உணவில் போதைப்பொருள் கலந்த போதைப் புழங்கிக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த உணவைச் சாப்பிட்டபோது அது வித்தியாசமாக இருப்பதை அந்த ஆடவர் உணர்ந்தார்.
சந்கேதம் எழுந்து,
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர் சோதித்துப் பார்த்தபோது 49 வயது டான் கோ தியோங் ஹோங்கின் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
உண்மை அறிந்ததும் அவர் காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தார்.
தமக்கு மிகவும் சோர்வாக இருந்ததாகவும் இதயப் படபடப்பு அதிகமாக இருந்ததாகவும் அளவுக்கு அதிகமான விழிப்புடன் இருந்ததாகவும் தெரிவித்த அந்த ஆடவர் மருத்துவமனைக்குச் சென்றார்.
அவருக்குச் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டபோது அதில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான தடயங்கள் தென்பட்டன.
போதைப்பொருள் உட்கொண்டது, பிறரது உணவில் போதைப்பொருள் கலந்தது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை கோ ஒப்புக்கொண்டார்.
தம்முடன் வாட்டர்லூ ஸ்திரீட்டில் வசித்த 48 வயது ஆடவரைக் காவல்துறையினரிடம் சிக்கவைக்கவே அவரது உணவில் போதைப்பொருளை கோ கலந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

