மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் கிட்டத்தட்ட $1 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது. 102 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அண்மைய ஆண்டுகளில் பறிமுதலான ஆகப் பெரிய அளவிலான போதைப் பொருள் இது எனக் கூறப்பட்டது.
ஐந்து நாள் சோதனையில் சுமார் 6.2 கிலோ ஹெராயின், 20 கிலோ கஞ்சா, 724 கிராம் ஐஸ் ஆகியவற்றோடு மற்ற வகையான போதைப் பொருளும் சிக்கின.
அங் மோ கியோ, பிராடல் ஹில், புக்கிட் பாதோக், யோ சு காங் போன்ற வட்டாரங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் 2,960 ஹெராயின் புழங்கிகள், 2,910 கஞ்சா புழங்கிகள், 410 ஐஸ் புழங்கிகள் ஆகியோர் ஒரு வார காலத்துக்குப் பயன்படுத்தும் அளவுக்குச் சமமானது என்று தெரிவிக்கப்பட்டது.
சோதனையில் ஒரு 17 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
500 கிராமுக்கு மேல் கஞ்சா அல்லது 15 கிராம் தூய ஹெராயின் கடத்துவோர் மரண தண்டனையை எதிர்நோக்கக்கூடும்.