பின்தொடர்தல் தொடர்பான தண்டனைகள் பெற்றவருக்கு எட்டு நாள் சிறை, அபராதம்

பின்தொடர்தல் தொடர்பான தண்டனைகள் பெற்றவருக்கு எட்டு நாள் சிறை, அபராதம்

1 mins read
845466ea-daf4-4ccd-902c-e552d27b0119
-

பல்­வேறு பெண்­க­ளைப் பின்­தொ­டர்ந்­த­தற்­காக பல முறை சிறைக்­குச் சென்று வந்த 46 வயது ஆட­வர், ஹாலந்து ரோட்­டில் உள்ள பல்­வேறு இடங்­க­ளுக்­குள் அத்­து­மீறி நுழைந்­த­தற்­காக மீண்­டும் சட்­டத்­தின் பிடி­யில் மாட்­டிக்­கொண்­டார்.

காலின் மாக் இயூ லூங் எனும் அந்த ஆட­வர் தாம் வசிக்க வீடு இல்லை என்­றும் தமது குடும்­பத்­தி­னர் தன்னை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்­றும் புல­னாய்வு அதி­கா­ரி­க­ளி­டம் கூறி­னார்.

இந்­தக் குற்­றங்­க­ளுக்­காக மாக்­குக்கு நேற்று எட்டு நாள் சிறை­யும் $4,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன. அப­ரா­தம் செலுத்த தவ­றி­னால் அவர் கூடு­த­லாக 16 நாள்­கள் சிறை­யில் இருக்க வேண்­டும்.

சிங்­கப்­பூர் ஐஸ்­கி­ரீம் அரும்­பொ­ரு­ள­கம், செயின்ட் ஜார்­ஜஸ் தேவா­ல­யம், குளுனி ரோட்­டில் உள்ள அலு­வ­லக, குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஆகி­ய­வற்­றில் மாக் அத்து­மீறி நுழைந்­துள்­ளார்.

பெண்­க­ளைப் பின்­தொ­டர்­தல், அவர்­க­ளுக்­குத் தொல்லை கொடுத்­தல் போன்ற பற்பல குற்­றங்­களுக்­காக மாக், நவம்­பர் 2020ல் ஒன்­பது மாதச் சிறை, செப்­டம்­பர் 2019ல் இரண்டு மாதச் சிறை, டிசம்­பர் 2013ல் மூன்று ஆண்டு சிறை­, $5,000 அப­ரா­தம் என்று தண்­ட­னை­கள் பெற்­றுள்­ளார்.

தாம் செய்த குற்­றச்­செ­யல்­க­ளுக்­காக தாம் வருந்­து­வ­தா­க­வும் தற்­போ­தைய தண்­ட­னையை நிறை­வேற்­றிய பின் இயல்­பான வாழ்க்­கை­யைத் தொடர போவ­தா­க­வும் மாக் நீதி­மன்­றத்­தி­டம் தெரி­வித்­தார்.