1987க்குப் பிறகு சிங்கப்பூரில் ஆக அதிக வெப்பநிலை

1987க்குப் பிறகு சிங்கப்பூரில் ஆக அதிக வெப்பநிலை

1 mins read
92e333f3-c7fb-4bb7-a9ac-19d61c1ccd34
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஒரு மாத­மாக வெப்­ப­மான வானிலை சுட்­டெ­ரிக்­கும் வெயி­லாக பல­ரை­யும் முகம் சுளிக்க வைத்­துள்­ளது.

அந்த வகை­யில் ஏப்­ர­லில் ஆக அதி­க­மாக 34 டிகிரி செல்­சி­யஸ் வெப்­பம் பதி­வா­கி­யுள்­ளது. மே மாதம் இன்­னும் அதிக வெப்­பம் பதி­வா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஏப்­ரல் 1ஆம் தேதி அட்­மி­ரல்டி பகு­தி­யில் 36.8 டிகிரி வெப்­பம் பதி­வா­னது. இது 1987ம் ஆண்­டில் தெங்கா பகு­தி­யில் பதி­வான 37 டிகிரி வெப்­பத்­தை­விட 0.2 டிகி­ரி­தான் குறைவு.

சிங்­கப்­பூர் வெப்ப அலை­க­ளால் தாக்­கப்­படும் சூழ்­நிலை அமை­யாது என்று கூறும் வானிலை நிபு­ணர்­கள், குடி­ய­ர­சின் வெப்­பம் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தற்கு மாறாக இருந்­த­தில்லை என்­றும் கூறி­னர்.

பரு­வ­நிலை மாற்­றத்­தின் தாக்­கத்­தால் சிங்­கப்­பூ­ரும் இதர உலக நாடு­களும் வழக்­கத்­தைக் காட்­டி­லும் அதி­க­மான வெப்­பத்தை அனு­ப­விக்க நேரி­ட­லாம்.

குறிப்­பாக, ஏப்­ரல், மே மாதங்­களில் வெப்­ப­நிலை அதி­க­மாக இருக்­கும் என்று குறிப்­பிட்ட தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் கீழ் இயங்­கும் வானிலை ஆய்வு மையம், கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பிற்­ப­கல் 2 மணி முதல் 3 மணி வரை பாய லேபா­ரி­லும் மரினா அணைக்­கட்­டி­லும் வெப்­பம் 35.6 டிகிரி பதி­வா­னது என்­றும் தெரி­வித்­தது.