உள்ளூர் எழுத்தாளரும் கல்வியாளருகிய திரு பொன் சுந்தரராசு எழுதியுள்ள, 'சுண்ணாம்பு அரிசி' என்னும் வரலாற்றுப் புதினத்தின் அறிமுக நிகழ்ச்சி இன்று நடைபெறவிருக்கிறது. சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி இடம்பெறும்.
இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் தமிழர்கள் அடைந்த இன்னல்களை அடிப்படையாக வைத்து இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாவலில் சீனச் சமூகத்தினருக்கு ஜப்பானியர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளும் அநீதிகளும் விவரிக்கப்பட்டுள்ளது. சயாம் எனும் தாய்லாந்தில் மரண ரயில் பாதை போடுவதற்கு வல்லந்தமாக ஆள்களைப் பிடித்துச் சென்ற இரக்கமற்ற செயல்களும் கோடிகாட்டப்பட்டுள்ளது.
இந்த நூல் அறிமுக நிகழ்ச்சியில் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு சு மனோகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
திருமதி சுந்தரி சாத்தப்பன் தமிழ்வாழ்த்துப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்குகிறது. வாசகர் வட்டத்தின் தலைவர் திருமதி சித்ரா ரமேஷ் வரவேற்புரையாற்ற முனைவர் சுப திண்ணப்பன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா ஆண்டியப்பன், 'தி சிராங்கூன் டைம்ஸ்' மாத இதழின் முதன்மையாசிரியரும் இலக்கிய விருது பெற்ற எழுத்தாளருமான திரு ஷா நவாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.
சிங்கப்பூரில் கலாசார விருது' பெற்ற முன்னணி மூத்த எழுத்தாளர் திரு இராம கண்ணபிரானின் காணொளி வாழ்த்தும் இடம்பெறும்.
அத்துடன் இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்கள் திருமதி ஹேமா, திருமதி அழகுநிலா இருவரும் வாசகர் உரை நிகழ்த்துவர்.
மேலும் தமிழ்நாட்டின் சமகால மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான திரு சாரு நிவேதா ஸூம் தளத்தில் தோன்றி நூலைப் பற்றிய தமது கருத்தைக் கூறவிருக்கிறார். செல்வி மஜாஜபீன் நிகழ்ச்சியைத் தொகுத்து நெறிப்படுத்தவார்.
நிகழ்ச்சி நடைபெறும் விவரங்கள்.
நாள்: இன்று, சனிக்கிழமை 14.05.2022
இடம்: போட் (16வது மாடி) தேசிய நூலகம், 100 விக்டோரியா ஸ்திரீட்
நேரம்: மாலை 6.00 மணி
இணையத் தொடர்பு: https://bit.ly/SunnambuArisi
Meeting ID: 818 7851 1680 Passcode: 123456