இலங்கை: பொருளியல் மீட்சி மூலமே அமைதி ஏற்படும் சூழல்

4 mins read
209d45f7-4d4e-4995-8e7f-c5e9fef4226a
-

முரசொலி

இலங்கை பல ஆண்­டு­கா­ல­மாக பிரி­வினைவாத வன்­செ­யல்­களில் சிக்கி சீர­ழிந்த நாடு.

கடை­சி­யாக 2009ல் விடு­த­லைப் புலி­கள்­ அ­மைப்பு ஒடுங்கி பிரி­வி­னை­வா­தப் போராட்­டம் ஒரு வழி­யாக முடி­வுக்கு வந்­தது. நாட்­டைத் துண்­டாட இடம்­பெற்ற சதித்­திட்­டங்­க­ளைச் சுக்­கு­நூ­றாக்கி வெற்­றி­வாகை சூடிய மகிந்த ராஜ­பக்சே மக்­க­ளி­டம் பேரா­த­ரவைப் பெற்ற தலை­வ­ரா­னார்.

பிறகு ராஜ­பக்சே குடும்­பத்­தின் அர­சி­யல் செல்­வாக்கு கோலோச்­சத் தொடங்­கி­யது.

ராஜ­பக்­சே­வின் சசோ­த­ரர் கோத்­த­பாய ராஜ­பக்சே 2019ல் அதி­ப­ரா­க­வும் அவ­ரின் அண்­ண­னான மகிந்த 2020ல் பிர­த­ம­ரா­க­வும் மற்ற இரண்டு சகோ­த­ரர்­கள் வலு­வான பத­வி­யி­லும் இருந்து இலங்­கையை ஆண்டு வந்த சூழ­லில், நாடு இப்­போது மற்­றொரு வன்­செயல் போராட்­ட­த்தை எதிர்­நோக்­கு­கிறது.

இப்­போது பொரு­ளி­யல் போராட்­டம் விஸ்­வ­ரூ­ப­மாகத் தலை எடுத்து இருக்­கிறது.

ராஜ­பக்சே சகோ­த­ரர்­கள் நாட்­டின் பொரு­ளியலைப் பாழ­டித்­து­விட்­டார்­கள். அவர்­கள் குடும்­பமே பதவி விலக வேண்­டும் என்று கடந்த ஏப்­ரல் முதலே பல தரப்பு மக்­களும் ஆர்ப்­பாட்­டம் நடத்தி வந்த நிலையில், ஆர்ப்­பாட்­டக்­காரர்­களை ராஜ­பக்சே ஆத­ர­வாளர்­கள் தாக்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டதை அடுத்து வன்செயல்­வெடித்­தது.

ஆளும் தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உள்ளிட்ட எட்டுப்பேர் இது­வரை மர­ண­ம­டைந்­து­விட்­ட­னர்.

ஏரா­ள­மான பொருள்சே­தம் ஏற்­பட்­டு, கடைசியாக வேறுவழியின்றி பிர­த­மர் பத­வி­யில் இருந்து மகிந்த விலகி இருக்­கி­றார். இலங்கை அர­ச­மைப்­புச் சட்­டத்­தின்­படி பிர­த­மர் என்­ப­வர் அமைச்­ச­ர­வை­யின் தலை­வர். ஆனால் அர­ச­மைப்­புச் சட்­டப்­படி, நாட்டு நிர்­வா­கத்­தைப் பொறுத்­த­வரை பிர­த­ம­ரை­விட அதி­பருக்­குத்­தான் அங்கு அதி­கா­ரங்­கள் அதி­கம்.

இத்­த­கைய ஓர் ஏற்­பாடு மாற வேண்­டும் என்று நெடுங்­கா­ல­மாக குரல் எழுந்து வரு­கிறது.

இலங்கை சுதந்­தி­ரத்­துக்­குப் பிறகு இது­வரை சந்­தித்­தி­ராத படு­மோ­ச­மான பொரு­ளி­யல் நெருக்­கடி­களை எதிர்­நோக்கி கிட்­டத்­தட்ட நொடித்­துப்­போ­கும் நிலை­யில் இருக்­கிறது.

அந்­நியச் செலா­வணி கையி­ருப்பு இல்லை. ஆகை­யால் எந்­தப் பொரு­ளை­யும் இறக்­கு­மதி செய்ய முடி­ய­வில்லை. அதி­க­மாக கடன் வாங்கி அநி­யாய வட்டி செலுத்த வேண்டி இருப்­ப­தால் மேற்­கொண்டும் எப்­படி யாரி­டம் கடன் வாங்­கு­வது என்­பது தெரி­யா­மல் நிர்­வா­கம் விழி பிதுங்கி நிற்­கிறது.

65,610 சதுர கிலோ மீட்­டர் பரப்­புள்ள இலங்­கை­யில் கிட்­டத்­தட்ட 22 மில்­லி­யன் மக்­கள் வாழ்­கிறார்­கள். இலங்கை பொரு­ளி­ய­லுக்குத் தேயிலை ஏற்று­மதி, ஆடை உற்­பத்தி, சுற்­று­லாத்­துறை மூன்­றும் மிக முக்­கிய அம்­ச­மாக இருந்து வரு­கின்­றன.

கடந்த 2019ஆம் ஆண்டு அந்த நாட்­டில் அடுக்­கடுக்­காக பல குண்­டு­கள் வெடித்­ததை அடுத்து சுற்­று­லாப் பய­ணி­கள் குறைந்­து­விட்­ட­னர். போதாக் குறைக்கு கொரோனா தொற்று சுற்­று­லாத் துறையை அறவே படுக்­க­வைத்துவிட்­டது.

இவை போதாது என்று அதி­ப­ரான கோத்­த­பாய ராஜ­பக்­சே­வின் பொருளி­யல் கொள்­கை­களும் நாட்டை இறங்­கு­மு­க­மாக்­கி­விட்டதாக எதிர்த்தரப்புகள் கூறுகின்றன. நடப்­பில் இருந்த வரியைக் குறைத்­த­தால் அர­சாங்­கத்­தின் வரு­மா­னம் பாதிக்­கப்­பட்­டது.

நூற்­றுக்கு­நூறு இயற்கை விவ­சா­யத் திட்­டத்தை உடனடி­யாக அமல்­ப­டுத்­தி­ய­தால் உணவு உற்­பத்தி பாதிக்­குப் பாதி குறைந்­து­போனது. தேயிலை உற்­பத்­தி­யும் முடங்­கி­யது. ஏற்­று­ம­தி­களும் குறைந்­தன.

அந்­நிய கையி­ருப்பு கிடு­கி­டு­வென சரிய, அத்தி­யா­வ­சி­யப் பொருள்­களை இறக்­கு­மதி செய்ய முடியாத நிலை எற்­பட்­டது. ஏற்­கெ­னவே பெரும் வட்­டிக்கு வாங்கி கடன்­களை அடைக்க முடி­யாத சூழ்­நி­லை­யில் மேலும் கடன் வாங்­கும் சூழ்­நி­லைக்கு அர­சாங்­கம் தள்­ளப்­பட்­டது.

இவை எல்லாம் சேர்ந்து பொதுமக்களைப் பெரிதும் பாதித்தது. அவர்களின் அன்றாட வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலைக்கு ராஜ­பக்­சேக்­க­ளின் நிர்­வா­கமே கார­ணம்; அவர்­கள் பத­வி­யை­விட்டு வில­கி­னால்­தான் நாட்­டிற்கு விமோசனம் பிறக்­கும் என்­று மக்­கள் தொடர் போராட்­டத்­தில் இறங்­கி­விட்­ட­னர்.

செல­வுக்குப் பணம் வேண்­டும்; எரி­பொருள் வேண்­டும், மூன்று வேளை உணவு வேண்டும்; மின்சாரம் வேண்டும் என்று மக்­கள் வீதி­யில் இறங்கி போரா­டு­கி­றார்­கள். அவை வன்செயல் ஆர்ப்பாட்டமாக மாறியதை அடுத்து பிரதமர் விலகிவிட்டார்.

தேர்­த­லி­லும் அர­சி­ய­லி­லும் கோலோச்சி வந்த ராஜ­பக்­சேக்­க­ளின் செல்­வாக்கு இப்­போது முன் ஒரு­போ­தும் இல்­லாத அள­வுக்­குச் சரிந்து இருக்­கிறது. எல்­லா­ரு­மா­கச் சேர்ந்து புதிய அர­சாங்­கத்தை அமைத்து பொரு­ளி­யலை மீட்­டெ­டுப்­போம் என்று அதி­பர் விடுத்த அழைப்பை எதிர்க்­கட்­சி­யி­னர் நிராகரித்து இருக்­கி­றார்­கள்.

கடைசியாக, பிர­த­மர் பொறுப்பு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான ரணில் விக்­ர­ம­சிங்­கே­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு இருக்­கிறது. என்­றா­லும் புதிய அர­சை அமைக்க அவர் திண­றி­வ­ரு­வ­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ரணில் மேற்­கத்­தி­யச் சந்தை பொரு­ளி­யல் ஆத­ர­வா­ளர். அவர் ஆறா­வது முறை­யாக இலங்­கை­யின் பிர­த­ம­ரா­கப் பதவி ஏற்று இருக்­கி­றார். இந்­தியா போன்ற பக்­கத்து நாடு­க­ளு­டன் தோழமை உறவைக் கடைப்­பி­டித்து வரு­ப­வர் ரணில் என்­பது இதில் குறிப்­பி­டத்­தக்க ஒன்­றா­கும்.

இலங்­கை­யின் ஜன­நா­ய­கத்­திற்­கும் நிலைப்­பாட்­டிற்­கும் பொரு­ளி­யல் மீட்­சிக்­கும் உத­வப் போவ­தாக இந்­தியா ஏற்­கெ­னவே அறி­வித்து இருக்­கிறது.

புதி­தாக பிர­த­மர் பொறுப்­பேற்று இருக்­கும் ரணில், நாட்டு மக்­க­ளின் நம்­பிக்­கையை முத­லில் பெற­வேண்­டும். பொரு­ளி­யலை மீட்­சிப் பாதைக்­குத் திருப்பி அதை மேம்­ப­டுத்த வேண்­டும்.

அதி­பர் தனது அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி ராணு­வத்­தைப் பணி­யில் ஈடு­ப­டுத்தி ஆர்ப்­பாட்­டத்தை இப்­போ­தைக்கு ஒடுக்கி இருக்­கி­றார்.

ஆனால் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களோ அதி­பர் பதவி விலகும் வரை தாங்­கள் ஓயப்­போ­வ­தில்லை என்று அறி­வித்து இருக்­கி­றார்­கள். அதிபரும் தான் விலகப் போவதில்லை என்று தெரிவித்து இருக்கிறார். தன் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை நிரந்தரமாக ஒடுக்கிவிடலாம் என்று அதிபர் கருதி னால் அது விவேகமற்ற முடிவாகவே இருக்கும்.

இந்த நெருக்கடியான சூழலில் ரணில் விக்­ர­ம­சிங்­கே­வின் அனு­ப­வ­மும் அவர் எப்­படி செயல்­ப­டப்­போ­கி­றார் என்­ப­தும் மிக முக்­கி­ய­மா­கக் கவ­னிக்­கப்­ப­டு­கிறது. இலங்­கை­யில் நிரந்­தர அமை­திக்கு அர­ச­மைப்­புச் சட்ட மாற்­ற­மும் பொரு­ளி­யல் மாற்­றங்­களும் தேவை என்­று­தான் யூகிக்க முடி­கிறது.

பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்புகளும் சேர்ந்து அமைதியாக இதைச் சாதிக்க வேண்டும்.