தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விசாக தினம்: சந்தித்து மகிழ்ந்த பக்தர்கள்

2 mins read
51950cb9-086e-4c35-a77b-6afdda05e438
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் நேற்று திபெத்திய பௌத்த ஆலயமான தெக்சன் சூலிங்கில் பக்தர் களுடன் சேர்ந்து வழி பட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஹர்­‌‌ஷிதா பாலாஜி

பெளத்த சம­யத்­தி­னர் மூன்று ஆண்டு­களில் முதல் தட­வை­யாக நேற்று நேர­டி­யாகக் கலந்­து­கொண்டு விசாக தினத்தை கொண்­டா­டி­னர். ரேஸ் கோர்ஸ் சாலை­யில் அமைந்­துள்ள சாக்­கி­ய­முனி புத்த கயா ஆல­யத்­தில் பல பக்­தர்­கள் ஒன்­று­கூடி வழி­பட்­ட­னர்.

என்­றா­லும் கொவிட்-19க்கு முந்திய விசாக தின வழி­பாட்­டில் இருந்து இந்த ஆண்டு வழி­பாடு கொஞ்சம் மாறி இருந்­தது.

கொவிட்-19 தொற்றை நினைத்து பல­ரும் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் வழி­பட்­ட­னர்.

எடுத்­துக்­காட்­டாக தெக்­சன் சூலிங் பௌத்த ஆல­யத்­தில் புத்­தர் சிலை­யில் நீர் ஊற்றி வழி­பட போத்தல் தண்­ணீர் கொடுக்­கப்­பட்­டது. முன்பு வாளி­யில் இருக்­கும் தண்­ணீரை பக்­­தர்­கள் பய­ன்ப­டுத்­து­வார்­கள். மற்­ற­படி வழி­பாடு­கள் நேற்று சிறப்­பாக நடந்­தன.

"ஒவ்­வோர் ஆண்­டும் தவ­றா­மல் விசாக தினத்­தன்று சாக்­கி­ய­முனி ஆல­யத்­துக்கு வரு­வேன்.

ஆனால் கடந்த ஈராண்­டு­க­ளாக கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் அதி­க­மாக இருந்­த­தால் என்­னால் வர­முடி­ய­வில்லை. இவ்­வாண்டு கட்டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் மீண்டும் மன­நி­றை­வு­டன் வழி­பாடு செய்ய முடிந்­தது." என்று திரு­வாட்டி மகேஸ்­வரி, 49, தெரிவித்தார்.

அதே சாலை­யில் அமைந்­துள்ள மற்­றொரு பௌத்த ஆல­ய­மான லியோங் சான் சீ ஆல­யத்­துக்­கும் பல பக்­தர்­கள் வந்­த­னர். 1913ஆம் ஆண்­டில் தோற்­றம் கண்ட இவ்­வா­ல­யத்­தில் அனைத்து புத்­தர்­களின் கருணை வடி­வ­மாக சித்­த­ரிக்­கப்­படும் குவான் யின்/அவ­லோ­தி­கரை பிர­தான தெய்­வ­மாக பக்­தர்­கள் வழி­ப­டு­கி­றார்­கள்.

"சிங்­கப்­பூ­ரில் அனை­வ­ரும் ஒன்று­பட்டு வாழ்­வ­தால் அனைத்து சமயங்களைப் பற்­றி­யும் தெரிந்­து­கொள்ளும் வாய்ப்பு உண்டு.

"இவ்­வா­ல­யத்­துக்கு வரும் முன் சாக்­கி­ய­முனி புத்த காய ஆல­யத்­தி­லும் வழி­பாடு செய்­து­விட்டு வந்­தேன். என்­னால் முடிந்­தால் ஒவ்­வோர் ஆண்­டும் வரு­வேன்" என்றார் டிசி­எஸ் நிறு­வ­னத்­தில் ஆலோ­ச­க­ராக பணி­பு­ரி­யும் திரு பெரி­ய­க­ருப்­பன் கண்­ணப்­பன், 58.

அதே­போல, செயின்ட் மைக்­கல் சாலை­யில் ஸ்ரீ லங்க ராமாயா ஆல­யத்­தில் கூடிய பக்­தர்­கள் புத்­த­ரின் சிலை­க­ளுக்கு முன் பூக்­க­ளை­யும் விளக்­கு­க­ளை­யும் வைத்து வேண்டி­னர். குறிப்­பாக, பல புத்த ஆல­யங்­களில் காணப்­படும் புனித போதி மரத்தைச் சுற்றி இருந்த நான்கு புத்தர் சிலை­க­ளுக்­குத் தங்­கள் காணிக்­கை­களை வழங்கி பக்தர்கள் வழி­பாடு செய்­த­னர்.

சிறு வய­தி­லி­ருந்தே சாக்­கி­ய­முனி புத்த காய ஆல­யத்­துக்கு சென்று வரும் எஸ்டி லாஜிஸ்­டிக்ஸ் நிறு­வ­னத்­தில் மூத்த தள­வாட உத­வி­யா­ள­ராக பணி­பு­ரி­யும் 52 வயது திரு அசோக் குமார், அண்மைய கால­மாக ஸ்ரீ லங்க ராமாயா ஆல­யத்­திலும் வழி­பட்டு வரு­கி­றார்.

அங்கு வழங்­கப்­படும் ஆசிர்­வதிக்­கப்­பட்ட கயிற்றைப் பெற்று நல்லாசி பெறு­வ­தற்­காக இந்த ஆலயத்திற்கு இவர் சென்று இருந்தார்.