உதவி எண்களை அழைக்கும் மூத்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

உதவி எண்களை அழைக்கும் மூத்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
814bda78-fb35-4561-9751-b07a3ed96b6f
-

கொவிட்-19 பெருந்­தொற்­றின் முதல் ஆண்­டை­விட இரண்­டா­வது ஆண்டு அதி­க­மான மூத்­தோர் சமூக நல முக­வை­கள் இயக்­கும் உ­தவி அழைப்பு எண்­க­ளுக்கு அழைத்து உதவி நாடி­யுள்­ள­னர்.பெருந்­தொற்­றி­னால் ஏற்­பட்­டுள்ள சோர்வு, நிலைத்­தன்­மை­யின்மை கார­ணங்­க­ளால் ­உ­தவி எண்­களை அவர்­கள் அழைத்­துள்­ள­னர்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் குறித்த கவ­லை­கள், இத­னால் ஏற்­படும் நீண்டகால விளை­வு­கள், அத­னைக் கையாள்­வ­தால் ஏற்­படும் சோர்வு போன்ற பிரச்­சி­னை­களுக்­கா­க தங்­களை அந்த மூத்­தோர் அழைத்­த­னர் என்று அந்த முக­வை­கள் தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­தன.

மூத்­தோ­ருக்­காக ஆலோ­சனை சேவை­க­ளை­யும் அவ­சர எண் சேவை­க­ளை­யும் இயக்­கும் 'சேஜ் கவுன்­ச­லிங்' நிலை­யம் கடந்த 2005 முதல் செயல்­பட்டு வரு­கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரை 11,912 அழைப்­பு­கள் வந்­தன என்­றும் அதற்கு முந்­தைய கால­கட்­டத்­தில் 10,365 அழைப்­பு­க­ளை தாங்­கள் கையாண்­ட­தா­க­வும் நிலை­யம் கூறியது. இது 15% அதி­கம்.

2020ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரில் தொற்­று­நோய் பர­வி­ய­நி­லை­யில், ​​பெரும்­பா­லான முதி­ய­வர்­கள் 2021ஆம் ஆண்­டும் தொடர்ந்து குடும்­பத்­தி­ன­ரின் அறி­வு­றுத்­த­லின்­படி வீட்­டி­லேயே இருந்­த­னர் என்றார் 'சேஜ் கவுன்­சி­லிங் சென்­டரி'ன் நிர்வாக இயக்­கு­நர் திரு­மதி கிரேஸ் லீ.

"பல முதி­ய­வர்­களுக்கு தனி­யாக வாழ்வதால் சோர்வு ஏற்­பட்­டது; அத­னால் கவ­லை­யும் பய­மும் அதி­க­ரித்­த­து­டன் தொற்­று­நோய் எவ்­வ­ளவு காலம் நீடிக்­கும் நிச்­ச­ய­மற்ற நிலையை உணர்ந்­த­வர்­க­ளாக இருந்­த­னர்," என்று அவர் கூறினார்.

"சிலர் முன்­பை­விட அடிக்­கடி எங்­களை அழைப்­பதைக் கவ­னித்­தோம், வீட்­டில் தனி­யாக இருப்­ப­தால் தங்­கள் நேரத்தை எப்­ப­டிச் செல­வி­டு­வது என்று தெரி­யா­மல் தவித்­த­னர்," என்­றும் சொன்னார்.

இருப்­பி­னும் நிலைமை மாறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாண்டு ஏப்­ரல் 26 முதல் எந்த குழு அள­வி­லான கட்­டுப்­பா­டும் இல்­லா­மல் சிங்­கப்­பூ­ரர்­கள் ஒன்­று­கூட வழி­பி­றந்­தது. வெளிப்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் அணி­வ­தும் கட்­டா­யம் ஆக்­கப்­ப­ட­வில்லை.

சில்­வர் ரிப்­பன் அமைப்­புக்கு அழைக்­கும் மூத்­தோ­ரின் எண்­ணிக்கை 10% அதி­க­ரித்­துள்­ளது. 'டச்' சமூக சேவை­கள் அமைப்பு 9% அழைப்பு அதி­க­ரிப்­பைக் கண்டது.

'டச்' சமூக சேவை­கள் அமைப்பு மூத்­தோ­ருக்­கும் இதர பிரி­வி­ன­ருக்­கும் சேவை ஆற்­று­கிறது. சில்­வர் ரிப்­பன் அமைப்பு மன­நல பிரச்­சினை உடை­யோ­ருக்கு இல­வச ஆலோ­சனை வழங்­கு­கிறது.