'பர்­கர் அண்ட் லாப்ஸ்­டரி'ல் உண்ட 17 பேருக்கு பாதிப்பு; கடை தற்காலிக மூடல்

'பர்­கர் அண்ட் லாப்ஸ்­டரி'ல் உண்ட 17 பேருக்கு பாதிப்பு; கடை தற்காலிக மூடல்

1 mins read
34016ca8-4900-4f75-8730-5a32bcd61616
-

ஜுவல் சாங்கி விமான நிலை­யத்­தில் உள்ள பர்­கர் அண்ட் லாப்ஸ்­டர் கிளை (படம்) அடுத்த அறி­விப்பு வரும் வரை தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளது. உண­வ­கத்­தில் தயா­ரிக்­கப்­பட்ட உணவை உண்ட 17 பேருக்கு குடல் அழற்சி ஏற்­பட்­டது.

மே 7ஆம் தேதிக்­கும் மே 15க்கு தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் உண­வ­கத்­தில் தயா­ரிக்­கப்­பட்ட உணவை உட்கொண்ட 17 பேரை பாதித்த குடல் அழற்­சி­யின் ஆறு சம்­ப­வங்­கள் குறித்து விசா­ரித்து வரு­வ­தாக சுகா­தார அமைச்­சும் சிங்­கப்­பூர் உணவு முக­வை­யும் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், தெரி­வித்­தன.

நான்கு பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் ஒரு­வர் வீடு திரும்பி விட்­டார். மற்ற மூவ­ருக்­கும் உடல்­நிலை சீராக உள்­ளது. மற்­ற­வர்­கள் வெளி­நோ­யாளி சிகிச்சை, சுய மருந்து பெற்­ற­னர் அல்­லது சிகிச்­சை­யின்றி குண­ம­டைந்­த­னர்.