டியோ: மத்திய கிழக்கில் சீனா-இந்தியா உரசல் ஏற்படலாம்

டியோ: மத்திய கிழக்கில் சீனா-இந்தியா உரசல் ஏற்படலாம்

2 mins read
cc14e41c-b0f6-4297-be36-cd326bd9b97b
மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

மத்­திய கிழக்­கில் சீனா­வும் இந்­தி­யா­வும் அவற்­றின் ஆதிக்­கத்தை அதி­க­ரிக்க முனைந்­துள்ள நிலை­யில் அவ்­விரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் உர­சல் ஏற்­ப­ட­லாம் என்று மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன் கூறி­யி­ருக்­கி­றார்.

மத்­திய கிழக்­குக் கல்வி நிலை­யத்­தின் வரு­டாந்­த­ரக் கருத்­த­ரங்­கில் நேற்று அவர் உரை­யாற்­றி­னார். மத்­திய கிழக்­கின் பங்­கா­ளித்­து­வத்­தைப் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் இந்­தியா சீனா இரண்­டுமே ஈடு­ப­டு­வ­தா­கத் திரு டியோ குறிப்­பிட்­டார். சீனா­வின் பெல்ட் அன் ரோட்' திட்­டத்­தில் ஏற்­கெ­னவே வளை­குடா நாடு­களும் ஈரா­னும் இணைந்­துள்­ளன. இந்­தி­யக் குடி­மக்­கள் வளை­குடா நாடு­க­ளுக்­குப் பெரிய எண்­ணிக்­கை­யில் புலம்­பெ­யர்ந்­துள்ள நிலை­யில் இந்­தி­யா­வும் மத்­திய கிழக்­கில் அதி­கக் கவ­னம் செலுத்­து­கிறது என்­றார் அவர்.

ரஷ்­யா­வின் எரி­பொ­ருள் விநி­யோ­கத்­தில் நிச்­ச­ய­மற்­ற­தன்மை நில­வும் நிலை­யில், ஐரோப்­பிய நாடு­க­ளைப் போன்றே, இந்­தி­யா­வும் சீனா­வும் மத்­திய கிழக்­கு­டன் தொடர்­பில் இருப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்­துள்­ளன. சீன-இந்­திய எல்­லை­யில் அண்­மை­யில் சர்ச்சை நில­விய நிலை­யில், தற்­போது மத்­திய கிழக்­கில் இரு நாடு­க­ளுக்­கும் போட்­டி­யி­டு­வது அவற்­றுக்­குள் உர­சலை ஏற்­ப­டுத்­தும் சாத்­தி­யம் இருப்­பதை மூத்த அமைச்­சர் சுட்­டி­னார்.

மேலும், மத்­திய கிழக்­கும் ஆசி­யா­வும் மூன்று அம்­சங்­களில் இணைந்து பணி­யாற்­ற­லாம் என்­றும் அவர் கூறி­னார். முத­லா­வது, நாடு­கள் ஒரு­பக்­கம் சாரா­மால், விதி­மு­றை­க­ளின் அடிப்­ப­டை­யி­லான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய, வெளிப்­ப­டை­யான, அனைத்­து­ல­கச் சட்­டத்­தை­யும் பரஸ்­பர மரி­யாதை, நல­னை­யும் மதித்து நடத்­தல். இரண்­டா­வது, சிறிய நாடு­கள் ஒன்­றி­ணைந்து உல­க­ளா­விய ஒழுங்­கு­மு­றை­யைச் சீர­மைக்க உத­வு­தல். மூன்­றா­வது, ஆசி­யா­வும் மத்­திய கிழக்­கும் அவற்­றுக்கு இடை­யி­லான புரி­த­லை­யும், மக்­கள் நிலைப் பரி­மாற்­றங்­க­ளை­யும் வலுப்­ப­டுத்த இணைந்து பணி­யாற்­று­தல். குறிப்­பாக இஸ்­லாத்­தின் நம்­பிக்­கை­கள், விழு­மி­யங்­கள் ஆகி­யவை குறித்த மேம்­பட்ட புரி­தலை உல­கெங்­கும் உரு­வாக்­க­வும் இரு­த­ரப்­பும் இணைந்து பணி­யாற்­ற­லாம் என்று மூத்த அமைச்­சர் டியோ கூறி­னார்.

மத்­திய கிழக்கு நாடு­கள் சமூக, சமய அள­வி­லான மாற்­றம் தேவை என்­ப­தைப் புரிந்­து­கொண்­டி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார். நேற்று, மத்­திய கிழக்­குக் கல்வி நிலை­யத்­தின் தலை­வ­ரும் ஓய்­வு­பெற்ற அர­ச­தந்­தி­ரி­யு­மான திரு பில­ஹரி கௌசி­க­னு­டன் கலந்­து­ரை­யா­டல் ஒன்­றி­லும் திரு டியோ பங்­கு­கொண்­டார்.

மத்திய கிழக்குக் கல்வி நிலைய கருத்­த­ரங்கு இன்று நிறை­வ­டை­யும்.