அமைச்சர் ஓங்: ஓமிக்ரான் ரகக் கிருமியின் புதிய திரிபு ஆச்சரியம் இல்லை

அமைச்சர் ஓங்: ஓமிக்ரான் ரகக் கிருமியின் புதிய திரிபு ஆச்சரியம் இல்லை

2 mins read
6ddc1abf-ae69-415b-92db-a1000348c117
திருமதி லோகாம்பாளுடன் உரையாடும் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மாதங்கி இளங்­கோ­வன்

கொவிட்-19 நோயை உரு­வாக்­கும் கிருமி தொடர்ந்து உரு­மாற்­றம் அடை­யக்­கூ­டி­யது என்­ப­தால் ஓமிக்­ரான் ரகக் கிரு­மி­யின் புதிய திரிபுகள் பற்­றிய தக­வல் ஆச்­ச­ரி­யம் அளிக்­கக்­கூ­டி­யது அல்ல என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யீ காங் கூறி­யி­ருக்­கி­றார்.

'பிஏ.4', 'பிஏ.5' ரகக் கிரு­மி­கள் சிங்­கப்­பூர் உள்­ளிட்ட பல நாடு­களில் கண்­ட­றி­யப்­பட்­டதை அவர் சுட்­டி­னார்.

'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட்ட அமைச்சர் பின்பு செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.

மக்­கள் தொகை­யில் மூத்­தோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் உடல்­ந­லத்தைப் பேணு­வ­தற்கு புதிய திட்­டங்­கள் அவ­சி­யம் என உணர்ந்­துள்ள சுகா­தார அமைச்சு, அவர்­க­ளு­டைய உடல் நலத்­தைப் பாது­காக்­கும் முக்­கிய குறிக்­கோ­ளோடு இவ்­வாண்டு முதல் 'ஹெல்­தி­யர் எஸ்ஜி' திட்­டத்தை அமல்­ப­டுத்­த­வுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் மருத்­துவக் குழு­மம், பொது மருத்­து­வர்­கள், இடை­நிலை, நீண்­ட­கால மருத்­துவச் சேவை­கள், சமூகப் பங்காளிகள், பொது­மக்­கள் என மொத்­தம் ஐந்து வெவ்­வேறு பங்­கு­தா­ரர்­க­ளின் ஆத­ர­வோடு சுகா­தார அமைச்சு 'ஹெல்­தி­யர் எஸ்ஜி' திட்­டத்தை ஏற்­பாடு செய்துவரு­கின்­றது.

மே 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பொது­மக்­க­ளின் ஆலோ­ச­னை­க­ளைச் சேக­ரிக்­கும் சுகா­தார அமைச்சு, அவற்­றுக்கு ஏற்ப எவ்­வாறு 'ஹெல்­தி­யர் எஸ்ஜி' திட்டத்தில், மக்­க­ளுக்கு பய­ன­ளிக்­கும் விதத்­தில் சில உத்­தி­களை அறி­மு­கப்­ப­டுத்­த­லாம் என தீர்­மா­னிக்க விரும்­பு­கின்­றது. சேக­ரிக்­கப்­பட்­ட கருத்­துகள் புதிய வெள்ளை அறிக்­கை­யில் வெளி­யிடப்படுவதுடன் நாடா­ளு­மன்­றத்­தில் இவ்­வாண்டு விவா­திக்­கப்படும்.

இந்தப் ­பொது ஆலோ­ச­னை­களில் கலந்­து­கொள்ள மக்­கள் www.healthiersg.gov.sg இணையப் பக்­கத்தை அணு­க­லாம்.

பொது­மக்­கள் நீண்ட கால­ அடிப்படையில் ஒரே பொது மருத்­து­வ­ரைப் பார்க்­கச் சென்­றால் அவர்­க­ளுக்கு பல்வேறு பயன்­கள் உள்­ளன என மருத்­து­வர்­கள் தம்மிடம் கூறியதாக அமைச்சர் குறிப்­பிட்­டார்.

"ஒவ்­வொரு குடும்­ப­மும் ஒரே பொது மருத்­து­வரை அணு­கி­னால் அவர்­க­ளுக்கு சரி­யான சுகா­தா­ரத் திட்­டத்தை தயா­ரிப்­ப­தோடு, சில ஆண்­டு­க­ளுக்கு அவர்­க­ளு­டைய உடல்நலத்­தைக் கண்­கா­ணிக்­க ­ம­ருத்­து­வர்­க­ளுக்கு அது ஏதுவாக இருக்­கும்," என்றார் அமைச்­சர் ஓங்.

ஈராண்­டு­க­ளுக்கு தொடர்ந்து 'எ மெடிக்­கல் கிளி­னிக்­'கி­லுள்ள மருத்­து­வர் லிம் ஹொங் ஷென் னிடம் மருத்­துவ ஆலோசனை பெறவிருக்கிறார் 77 வயது திரு­மதி லோகாம்­பாள் வெங்­க­டா­ச­லம்.

நீரிழிவு நோயாளியான இவர் மற்ற கார­ணங்­க­ளால் உடல்நல­ம் குன்றினால் மருத்­து­வர் லிம்மை அணு­கு­ம்போது, லோகாம்பாளின் உடல்நல வர­லாறு தெளி­வா­கத் தெரி­வ­தால் உட­ன­டி­யா­க அவ­ருக்கு உகந்த ஆலோ­ச­னை­யைத் தந்து தேவை­யான மருந்து மாத்­தி­ரை­களை மருத்துவர் லிம் அளிப்­ப­தா­கக் கூறி­னார்.

தமது குடும்பத்தினரும் பேரப்பிள்ளைகளும் உடல் நலம் பாதிக்கப்படும்போது சிகிச்சைக்கு மருத்துவர் லிம்மையே நாடுவதாகப் பகிர்ந்துகொண்டார் லோகாம்பாள்.