எஸ்எம்யு என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம், 'சினாகி' எனும் மின்வர்த்தக நிறுவனத்துடன் சேர்ந்து மின்வர்த்தகத்தை பெரியவர்கள் கற்றுக் கொள்வதற்காக 60 புதிய பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அறுபது பாடங்களையும் எஸ்எம்யுவின் நிபுணத்துவ பயிற்சி அமைப்பான எஸ்எம்யு அகாடமியும் சினாகி மின்வர்த்தக நிறுவனத்தின் சினாகி காமர்ஸ் அகாடமியும் நடத்தவிருக்கின்றன.
இது பற்றி கருத்துைரத்த 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்' தலைமை நிர்வாகியான டான் கோக் யாம், புதிய பாடங்கள் மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் 3,000 பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் மின்-வர்த்தகத் துறையில் அதற்குரிய திறன்களைப் பெற்ற மனிதவளம் இருப்பதை இதன் மூலம் உறுதி செய்யப்படும் என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமை மாலை புதிய பாடங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
"இதர துறைகளை போன்று மின் வர்த்தகத் துறைக்கும் மின்னிலக்கம், நிலைத்தன்மை போன்றவற்றில் திறன் பெற்ற திறனாளர்கள் தேவை.
"மின் வர்த்தகத் துறையில் முன் அனுபவம் இல்லாத சிங்கப்பூரர் களுக்கு பயிற்சி அளிக்கவும் இது உதவியாக இருக்கும்," என்றும் திரு டான் தெரிவித்தார்.
தனிப்பட்ட மேம்பாடு, சந்தை மயப்படுத்துதல், புத்தாக்கச் சேவைகள், வாடிக்கையாளர்களை ஈடு படுத்துவதற்கான தீர்வு உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் புதிய பாடங்கள் கவனம் செலுத்தும்.
தென்கிழக்கு ஆசியா மின்னிலக்கமயமாகி வரும் நிலையில் அவற்றுக்கான திறனாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் இவ்வட்டார நிறுவனங்கள் சவால்களை எதிர்நோக்குகின்றன என்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சினாகி தெரிவித்தது.
சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்ட அனுபவக் கற்றல் மூலம் மின்னிலக்க வர்த்தக துறைக்கு தேவையான திறன்களை ஆழமாகக் கற்றுக்ெகாள்ளும் வகையில் புதிய பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு 2வது பாதியிலிருந்து பெரியவர்கள் இந்தப் பாடத் திட்டங்களில் சேர முடியும்.
சிங்கப்பூரில் மின்வர்த்தக விற்பனை 2026ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் யுஎஸ் டாலர் (S$13.4 பில்லியன்) அளவுக்கு வளர்ச்சி அடைவதை எதிர்பார்க்கலாம் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிட்ட அறிக்கையில் பெய்ன் அண்ட் கம்பெனி சுட்டிக்காட்டியிருந்தது.

