பிறந்த நாளில் சண்டை

பிறந்த நாளில் சண்டை

1 mins read
3b87f533-19f0-4dee-8add-8735ec3a31e8
-

தனது பிறந்த நாளன்று குப்பை சேக­ரிக்­கும் நிலை­யத்­தில் உறங்­கிக்கொண்­டி­ருந்த துப்­பு­ர­வா­ள­ரு­டன் ஏற்­பட்ட வாக்­கு­வா­தத்­தில் அவரை தாக்கி தாடையை உடைத்­துள்­ளார் ஒரு­வர்.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் 24ஆம் தேதி நடந்த சம்­ப­வத்­தில் குற்­றச் செயல்­க­ளைப் புரிந்த சிங்­கப்­பூ­ர­ரான 43 வயது சஞ்­ஜீ­வன் மஹா­லிங்­கத்­துக்கு 21 மாதம், நான்கு வாரங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தன் மீது சுமத்­தப்­பட்ட ஐந்து குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் ஒப்­புக் கொண்­டார்.

வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­தது, பொதுச் ேசவை ஊழி­யரை தாக்­கி­யது, அவ­ரது கட­மையை செய்­ய­வி­டா­மல் தடுத்­தது ஆகிய குற்­றச்­சாட்­டு­கள் அவற்­றில் அடங்­கும்.