தீ, 35 பேர் வெளியேற்றம்

தீ, 35 பேர் வெளியேற்றம்

1 mins read
1e5822bc-3b53-4c87-9acc-5dcdd43f15fe
-

ஜாலான் புக்­கிட் மேரா வீட்­டில் தீ மூண்­ட­தைத் தொடர்ந்து ஏறக் குறைய 35 குடி­யி­ருப்­பா­ளர்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­ட­னர். செவ்­வாய்க்கிழமை காலை 11.35 மணிக்கு தீ விபத்து குறித்து தக­வல் வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத்தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. இதை­ய­டுத்து ஜாலான் புக்­கிட் மேரா­வில் புளோக் 117க்கு 'எஸ்­சி­டி­எஃப்' வீரர்­கள் விரைந்­த­னர். அப்­போது அந்த புளோக்­கில் 9வது மாடி­யில் உள்ள வீட்­டி­லி­ருந்து கரும்­புகை வெளி­யே­றிக் கொண்­டி­ருந்­தது. சுவா­சக் கரு­வி­களை அணிந்த வீரர்­கள் வீட்­டின் கதவை உடைத்­துக் கொண்டு உள்ளே நுழைந்த தாக­வும் அப்­போது அங்கு யாரும் இல்லை என்­றும் சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக 35 அக்­கம்­பக்க குடி­யி­ருப்­பா­ளர்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு வெளி­யேற்­றப்­பட்­ட­னர். மின்­சா­ரக் கசி­வி­னால் தீ மூண்­டி­ருக்­க­லாம் என்­பது முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வரு­வ­தா­க­வும் அது கூறி­யது. குடிமைத் தற்­காப்­புப் படை வெளி­யிட்ட படத்தில் வீட்­டின் தரை­யில் படுக்கை விரிப்­பும் கரு­கிய பொருட்­களும் இருப்­ப­தைக் காண முடிந்­தது. இதற்­கி­டையே தஞ்­சோங் பகார் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான இந்­தி­ராணி ராஜா, வீட்­டில் இருந்த இரு குழந்தைகளும் ஒரு பெண்­ணும் வெளியே போயி­ருந்­த­தால் யாரும் காயம் அடை­ய­வில்லை என்று பேஸ்­புக் பதி­வில் குறிப் பிட்டுள்ளார்.

9வது மாடியில் உள்ள வீட்டிலிருந்து கரும்புகை வெளி யேறியது.

படம்: இந்தி ராணி ராஜா ஃபேஸ்புக்