எஸ்ஐஏ: மதிப்புமிக்க பாடங்களை கொள்ளைநோய் கற்றுக் கொடுத்துள்ளது

எஸ்ஐஏ: மதிப்புமிக்க பாடங்களை கொள்ளைநோய் கற்றுக் கொடுத்துள்ளது

2 mins read
6944af9c-1d96-47a3-9def-3d5465ca601e
எஸ்ஐஏவுக்கு ஏற்பட்ட இழப்பு $4.3 பில்லியனிலிருந்து 2022 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் $962 மில்லியனுக்குக் குறைந்துள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒரு தலைமுறையில் ஏற்படக்கூடிய கொவிட்-19 கொள்ளைநோய், உலக விமானத் துறையை ஏறக்குறைய பேரழிவுக்குத் தள்ளிவிட்டது.

இருந்தாலும் உடனடியாகச் செயல்படுவது, தாக்குப்பிடித்து, உயிர்பிழைத்து, போதுமான நிதியைத் திரட்டுவது போன்ற மதிப்புமிக்க பாடங்களை அந்நோய் கற்றுத் தந்துள்ளது என்று கடந்த இரண்டு ஆண்டு அனுபவங்களை நேற்று பகிர்ந்துகொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்சின் தலைமை நிர்வாகி கோ சூன் போங் தெரிவித்தார்.

"2091ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் வர்த்தகத்தை உருமாற்றும் திட்டத்தின் முதல் கட்டத்தில் இருந்தோம். அப்போது சாதனை அளவு பயணிகளைக் கொண்டிருந்தோம். சாதனை அளவு லாபத்தை அடைந்திருந்தோம். எல்லாேம சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டின் ஜனவரியில் எல்லாமே தலைகீழாக மாறி சீர்குலைந்தது," என்று திரு கோ கூறினார்.

"2020 ஏப்­ர­லில் கொவிட்-19க்கு முந்­தைய நிலை­யில் 18 இடங்­களுக்­கான விமா­னச் சேவை­யில் மூன்று விழுக்­காடு மட்­டுமே இயக்க முடிந்­தது. மாதத்­திற்கு 300 மில்­லி­யன் வீதம் பணம் வீணா­கிக் கொண்­டி­ருந்­தது. வரு­மா­னம் அடி­மட்­டத்­துக்­குச் சரிந்­தது. பங்­கு­தா­ரர்­கள் நிதி திரட்ட வேண்­டிய கட்­டா­யத்­துக்கு ஆளா­கி­னர்.

"2020 ஏப்­ரல் 1ஆம் தேதி­யி­லி­ருந்து இன்று வரை குழு­மம் $22.4 பில்­லி­யன் நிதி­யைத் திரட்­டி­யுள்­ளது.

"இதில் பங்­கு­தா­ரர்­க­ளின் 15 பில்­லி­யன் நிதி­யும் அடங்­கும். இது­வரை பயன்­ப­டுத்­தாத கடன் மூலம் 2.1 பில்­லி­யன் ெவள்­ளியை கூடு­த­லாக எஸ்­ஐஏ திரட்­டி­யது. ஒரு­ போதும் இப்­படி பல வளங்­க­ளி­லி­ருந்து நாங்­கள் நிதி திரட்­டி­ய­தில்லை," என்று திரு கோ நினைவு­ கூர்ந்­தார். "அதே சம­யத்­தில் பல்­வேறு பாடங்­களை கற்­றுக்­கொள்ள கொள்ளை­நோய் வாய்ப்­பாக அமைந்­தது," என்­றார் அவர்.

"இது போன்று மீண்­டும் நடக்­காது என்று நம்­பு­கி­றேன். ஆனால் அப்­படி நடந்­தால் என்ன செய்ய வேண்­டும் என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­யும். முழு அனு­ப­வ­மும் எங்­களை இன்­ன­மும் சுறு­சுறுப் ­பா­க­வும் தாக்­குப்­பி­டிக்­கக்­கூ­டிய வகை­யில் செயல்­பட வைத்­துள்­ளது," என்று திரு கோ மேலும் தெரி­வித்­தார். 2022 மார்ச் வரை­யி­லான நிதி ஆண்­டில் ஒட்­டு­மொத்­த­மாக $962 மில்­லி­யன் நட்­டம் ஏற்­பட்­ட­தாக கடந்த புதன்­கி­ழமை எஸ்­ஐஏ தெரி­வித்­தது.

இது, கடந்த ஆண்டு ஏற்­பட்ட $4.3 பில்­லி­யன் இழப்­பை­வி­டக் குறைவு. கடந்த ஆண்டு பிற்­ப­கு­தி­யில் பய­ணங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்கத் தொடங்­கி­ய­தால் வரு­மா­னம் $3.8 பில்­லி­ய­னி­லி­ருந்து $7.6 பில்­லி­ய­னுக்­குக் கூடி­யது. சரக்­கு­க­ளுக்­கான சேவை­யில் லாபம் இரண்டு மடங்கு கூடி­ய­தால் ஒட்­டு ­மொத்த நட்­ட­மும் $1.1 பில்­லி­ய­ன் என­ பாதி­யா­கக் குறைந்­தது.