முன்மாதிரி ஊழியர்களை கௌரவித்த மே தின விருது

முன்மாதிரி ஊழியர்களை கௌரவித்த மே தின விருது

2 mins read
7a9df3f7-17cf-4e5a-b2c4-e9c24c61d7cd
பாப் டானுக்கு (வலம்) விருது வழங்கியஇங் சீ மெங்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மாதங்கி இளங்­கோ­வன்

தேசிய தொழிற்­சங்கக் காங்­கி­ர­ஸின் மே தின விரு­து­கள், நேற்று ஃபேர்ேமான்ட் சிங்­கப்­பூ­ரில் நடந்தது. மொத்­தம் 149 தொழிற்­சங்­கத் தலை­வர்­கள், முத்­த­ரப்பு பங்­கா­ளி­கள், முன்­மா­திரி ஊழி­யர்­க­ளுக்கு விரு­து­கள் வழங்­கும் இவ்­விழா, இவ்­வி­ரு­து­க­ளின் வர­லாற்றி லேயே இவ்­வாண்டு ஆக அதி­க­மா­ன­வர்­கள் கௌர­வப்­ப­டுத்தப் பட்டுள்ளனர்.

முத­லா­ளி­கள், தொழி­லா­ளர் சங்­கம், அர­சாங்­கம் உள்­ளிட்ட முத்­த­ரப்­பில் ஊழி­யர்­கள் நியாய­மாக நடத்­தப்­பட வேண்­டும் என்று தொழில் அனு­ப­வ­முள்ள பாப் டான் தெரி­வித்­துள்­ளார்.

இவ்­வாண்­டின் தேசிய தொழிற்­சங்கக் காங்­கி­ர­சின் தலை­சி­றந்த சேவைக்­கான (நட்­சத்­தி­ரம்) விருதை பெற்ற திரு டான், தொழி­லா­ளர் சங்­கத்­திற்கு செய்த சேவை­க­ளுக்­கும் 'என்­டி­யுசி கிளப்' நிர்­வாக மன்­றத்­துக்கு பங்­க­ளித்­த­தற்காகவும் இவ்­வி­ருதை பெற்­றுள்­ளார்.

ஆஸ்­காட் பிசி­னஸ் டிரஸ்ட், செந்­தோ­சாத்­தீவு மேம்­பாட்டு கூட்டு நிறு­வ­னம் மற்­றும் எஸ்­பி­எஸ் உள்­ளிட்ட நிறு­வ­னங்­க­ளில் அவர் தலை­வ­ராக இருந்­துள்­ளார்.

திரு டான், தேசிய தொழிற்­சங்­கத்­தில் சுமார் 30 ஆண்­டு­க­ள் பங்­க­ளித்­த­தோடு டவுன்­டௌன் ஈஸ்ட், 'வைல்ட் வைல்ட் வெட்' போன்ற பொழு­து­போக்கு வச­தி­களை மேம்­ப­டுத்­த­வும் உத­வி­னார். சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் கூட்­ட­மைப்­பின் உதவித் தலை­வ­ரா­க­வும் அவர் 15 ஆண்­டு­கள் பணி புரிந்­தார்.

சுமார் 500க்கும் மேற்­பட்­டோர் மே தின விருது நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு சக ஊழி­யர்­க­ளுக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் முத்­த­ரப்பு பங்­கா­ளி­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளித்­த­னர். தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் தலை­வர் மேரி லியவ், தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் ஆகிய இரு­வ­ரும் இவ்­வி­ரு­த­ளிக்­கும் விழாவை முன் நின்று நடத்­தி­னர்.

தொழிற்­சங்கத் தலை­வர்­கள், தங்­கள் நிறு­வ­னங்­க­ளின் ஊழி­யர்­க­ளு­டைய வேலை வாய்ப்­பு­க­ளைத் தக்­க­வைப்­ப­தோடு அவர்­க­ளு­டைய தேவை­க­ளைப் புரிந்­து­கொண்டு அவற்றை நிறை­வேற்­று­வ­தற்­காக கடு­மை­யாக உழைத்­துள்­ள­னர்.

அவ்­வி­தத்­தில் 22 ஆண்டு களுக்கு சிங்­கப்­பூர் விமான நிலை­யத்­தின் அங்­க­மான 'சேட்ஸ்' ஊழி­யர் சங்­கத்­தின் பொதுச் செய­லா­ள­ராக இருக்­கும் கோவிந்­தன் சதா­சி­வ­மும், 53, தமது நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­க­ளு­டைய வேலை­வாய்ப்­பு­களை பாது­காக்க பல­த­ரப்­பட்ட முயற்­சி­களில் ஈடு­பட்­டார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட விமா­னத் துறை­யில் வேலை­களை இழந்துவி­டுவோம் என்ற பயத்­தில் இருந்­த­வர்­க­ளுக்கு திறன்­களை வளர்ப்­ப­தற்­கான பயிற்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தார். இவ­ரு­டைய பங்­கிற்­கும் ஊழி­யர்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கும் மனப்­பான்­மைக்­கும் என்­டி­யு­சி­யின் தொழி­லா­ளர் தோழர் விருது வழங்­கப்­பட்­டது.

இவ­ரைப்போல தொழி­லா­ளர் தோழர் விரு­தைப் பெற்ற அல­மேலு பாலையா, 52, "எனது பங்­க­ளிப்­பிற்காக இவ்­வி­ருதை பெரு­வ­தில் நான் பெரு­மி­தம் கொள்­கி­றேன். இவ்­வி­ருது, என் சக ஊழி­யர்­க­ளுக்கு தொடர்ந்து ஆத­ர­வ­ளிக்க இன்­னும் அதிக ஊக்­க­ம­ளிக்­கின்­றது," என்­றார்.

சிங்­கப்­பூர் நக­ரச் சீர­மைப்பு ஆணை­யத்­தின் தொழி­லா­ளர் சங்­கத்­தின் செயற்­குழு உறுப்­பி­ன­ரான அல­மேலு, தொழி­லா­ளர் இயக்­கத்­தில் தொடர்நது ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் மாற்­றங்­கள் வர­வேற்­கப் ­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

உள்­துறை அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லா­ளர் பங் கின் கியோங், மறைந்த ரிச்­சர்ட் மேக்­னஸ் உட்­பட 12 தனிப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் நான்கு நிறு­வ­னங்­க­ளுக்­கும் விருதுகள் வழங்­கப்­பட்­டன.