காதல் வலையில் சிக்கி 380 பேர் $15 மில்லியன் இழந்தனர்

காதல் வலையில் சிக்கி 380 பேர் $15 மில்லியன் இழந்தனர்

1 mins read
401dfef6-cd3d-46e7-9d8e-a6520c8753da
-

இவ்­வாண்­டின் தொடக்­கத்­தி­லி­ருந்து இணை­யம் வழி­யாக வீசப்­பட்ட மோசடி காதல் வலை­யில் குறைந்­தது 380 பேர் சிக்கி சுமார் 15 மில்­லி­யனை இழந்­துள்­ள­னர்.

காதல் வலை வீசும் மோச­டிக்­கா­ரர்­கள் சமூக ஊட­கங்­கள் வழி­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் நட்பை ஏற்­ப­டுத்தி உறவை வளர்த்­துக் கொள்­கின்­ற­னர் என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் காவல்­துறை தெரி­வித்­தது.

பெரும்­பா­லான சம்­ப­வங்­களில் மதிப்­பு­மிக்க பரி­சுப் பொருளை அனுப்பி வைத்­த­தாக மோச­டிக் ­கா­ரர்­கள் கூறு­கின்­ற­னர். அதன் பிறகு பொருட்­களை விநி­யோ­கிக்­கும் நிறு­வ­னத்­தி­லி­ருந்து பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அழைப்பு வரும். அப்­போது அவ­ருக்கு வந்த பொருளை அதி­கா­ரி­கள் தடுத்து வைத்­தி­ருப்­ப­தாக அந்த அழைப்பு தெரி­விக்­கும். இந்­தப் பொருளை விடு­விக்க வேண்­டு­மா­னால் இணை­யம் வழி­யாக மற்­றொரு வங்­கிக் கணக்­குக்­கு பணம் அனுப்ப வேண்­டும் என்று தெரி­விக்­கப்­படும். மற்­றொரு முறை­யில் நிதி உதவி கேட்­டும் மோச­டி­கள் இடம்­பெ­று­வ­தா­க­வும் காவல்­துறை குறிப்­பிட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், சிங்­கப்­பூர் சுங்­கத் துறையை தொடர்­பு­கொண்டு விநி­யோ­கக் கட்­ட­ணம் குறித்து விசா­ரிக்­கும்­போதோ, சந்­தே­கம்­அடைந்து காவல்­து­றை­யு­டன் தொடர்­பு­கொண்டு அது பற்றி கேட்­கும்­போதே தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டதை உணர்ந்­து­கொள்­கின்­ற­னர்.

2020ஆம் ஆண்­டில் 822 இணை­யக் காதல் மோச­டி­கள் நடந்­துள்­ளன. இது, 2011ல் பதி­வான 62 சம்­ப­வங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் 13 மடங்கு அதி­கம். இந்த நிலை­யில் இணை­யம் வழி­யாக முன்­பின் அறி­மு­க­மில்­லா­த­வர்­கள் பழ­கி­னால் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­கும்­படி காவல்­து­றை­யி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர். முன்­பின் ெதரி­யாத நபர்­க­ளுக்கோ நேரில் சந்­திக்­கா­த­வர்­க­ளுக்கோ பணம் அனுப்ப வேண்­டாம் என்­றும் அவர்கள் கேட்டுக் ெகாண்டனர்.