சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் தவறான தகவல்களுடன் பயிற்சி படிவங்களைச் சமர்ப்பித்ததாக 'புருடென்ஷியல் அஷுரன்ஸ் கம்பெனி சிங்கப்பூர்' நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு காப்புறுதி முகவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கிரேஸ் டான் ஷென், 38, நிதி ஆலோசகர் சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
யுவென் புய் லெங், 44, மீது அதே சட்டத்தின் கீழ் ஆறு குற்றசாட்டுகளும் வேண்டுமென்றே நீதித் துறைக்கு இடையூறு செய்ததாகவும் குற்றச்சாட்டுகளை எதிர் ேநாக்குகிறார்.
விசாரணை தொடர்பில் 2018 செப்டம்பர் 14ஆம் தேதி நேர்காணலுக்கு வருமாறு 2018 செப்டம்பர் 14ஆம் தேதி யுவென் அழைக்கப்பட்டதாக சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அறிக்கை தெரிவித்தது. செப்டம்பர் 14க்கும் செப்டம்பர் 16க்கும் இடைப்பட்ட காலத்தில் டானிடம் அவருக்கு விவரங்கள் தெரியாத நிலையில் பயிற்சி படிவங்களை யுவென் நிரப்பச் சொன்னதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. டான், அந்தப் படிவங்களில் தவறான தகவல்களை நிரப்பிய பின்னர் ஆணையத்தின் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைக்கு ஜூன் 16ஆம் ேததி குறிப்பிடப்பட்டுள்ளது.

