தீவின் எட்டு இடங்களில் போக்குவரத்துக்கு உகந்த வேக வரம்பு குறைந்திருப்பதால், இம்மாதம் 30ஆம் தேதியில் இருந்து அந்தப் பகுதிகளில் 19 நேரங்களில் படிப்படியாக மின்னியல் சாலைக் கட்டணம் உயர்த்தப்படும்.
நிலப் போக்குவரத்து ஆணையம், ஏப்ரல், மே மாதங்களில் மேற்கொண்ட போக்குவரத்து நிலைமை கண்காணிப்பில், மார்ச் 29ஆம் தேதியில் இருந்து வேலையிடத் தளர்வுகளால் விரைவுச் சாலைகளின் பல்வேறு இடங்களில் போக்கு வரத்தின் அளவு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது என்று ஆணையம் கூறியது.
ஜூன் மாதம் பள்ளி விடுமுறை முடிந்த பிறகு, ஜூன் 27 முதல், மூன்று இடங்களில் ஆறு காலகட்டங்களில் மின்னியல் சாலைக் கட்டண உயர்வு தொடங்கும்.
"போக்குவரத்து வேகம், நெரிசலின் அளவை தொடர்ந்து கண்காணித்து, கட்டண விகிதங்கள் மேலும் சரிசெய்யப்பட வேண்டுமா என மதிப்பிடப்படும்," என்று ஆணையம் கூறியது.