பிரதமர் லீ சியன் லூங் இன்று முதல் இம்மாதம் 27ஆம் தேதி வரை பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் செல்கிறார்.
பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை இதனைத் தெரிவித்தது.
திரு லீ தமது பயணத்தில், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் வர்த்தகத் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார்.
நிக்கேய் வர்த்தக செய்திக் குழுமம் ஏற்பாடு செய்யும் ஆசியாவின் வருங்காலம் தொடர்பான 27ஆவது அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் திரு லீ நாளை மறுநாள் அதில் முக்கிய உரையாற்றுவார்.
பிளவுபட்ட உலகில் ஆசியாவின் பங்கை மறுவரையறுப்பது என்பது இந்தக் கருத்தரங்கின் கருப்பொருள்.
பிரதமருடன் அவரது துணைவியார், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், மனிதவள அமைச்சர் டான் சீ லெங், சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி ஆகியோரும் செல்கின்றனர்.
பிரதமர் லீ ஜப்பானியப் பயணம் மேற்கொள்ளும் வேளையில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

