புதிய மருந்துகளை மனிதர்களிடம் சோதிக்கும் நடுவமாகும் சிங்கப்பூர்

புதிய மருந்துகளை மனிதர்களிடம் சோதிக்கும் நடுவமாகும் சிங்கப்பூர்

1 mins read
9ef0a1fc-9bd5-4eab-8c67-4a756259840b
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகப் புற்றுநோய் நிலையத்தில் (என்சிஐஎஸ்) ஆய்வில் ஈடுபட்டுள்ள இணைப் பேராசிரியர் டேவிட் டான். படம்: என்சிஐஎஸ் -

சிங்­கப்­பூர் புதிய மருந்­து­களை மனி­தர்­க­ளி­டம் சோதிக்­கும் வட்­டார நிலை­யத்தை அமைப்­ப­தில் முனைந்­துள்­ளது.

புதிய சிகிச்­சை­மு­றை­கள், மருந்­து­கள் ஆகி­ய­வற்­றைச் சிங்­கப்­பூ­ரர்­கள் முன்­கூட்­டியே பெறு­வ­தற்கு இது வழி­வ­குக்­கும்.

நவீன மருத்­து­வத்­தின் அடி­நா­த­மாக விளங்­கு­வது புதிய மருந்­து­களை மனி­தர்­க­ளி­டம் சோதிக்­கும் நடை­முறை.

நீரி­ழிவு, புற்­று­நோய், கிரு­மித்­தொற்­றுக்கு சிகிச்சை அளிக்க உத­வும் 'ஆண்­டி­ப­யாட்­டிக்' மருந்­து­களை ஏற்­றுக்­கொள்ள இய­லாத உடல்­நிலை போன்ற பல்­வேறு மருத்­து­வச் சிக்­கல்­கள் தொடர்­பில் உல­கெங்­கும் ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அவற்­றின் விளை­வா­கக் கண்­டு­பி­டிக்­கப்­படும் புதிய மருந்­து­கள் உரிய அங்­கீ­கா­ரம் பெறு­வ­தற்கு அவை சோதனை அடிப்­ப­டை­யில் மனி­தர்­க­ளி­டம் பரி­சோ­திக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டி­யது அவ­சி­யம். ஆனால் கடந்த பல ஆண்­டு­க­ளாக இத்­த­கைய பரி­சோ­தனை முறை­களில் கணி­ச­மான மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

உதா­ர­ணத்­திற்கு இந்­தச் சோத­னை­களில் மருந்­து­க­ளைக் கொடுத்­துச் சோதிக்­கும் அவ­சி­யம் இல்­லா­மலே, குறிப்­பிட்ட உடல்­ந­லச் சிக்­கல்­கள் கொண்­டோ­ரைத் தொடர்ந்து கண்­கா­ணிப்­ப­தன் மூலம் நோய் உரு­வா­வ­தற்­கான கார­ணி­கள் குறித்­துப் புரிந்து கொள்­ள­லாம்.

பின்­னர் அதன் அடிப்­ப­டை­யில் நோய் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க அல்­லது நோயின் தீவி­ரத்­தைக் குறைக்க மருந்­து­களை எவ்­வாறு தரு­வது, மருந்­து­க­ளுக்­குப் பதில் குறிப்­பிட்ட வாழ்க்­கை­முறை மாற்­றங்­க­ளைப் பரிந்­து­ரைக்­க­லாமா என்று முடி­வெ­டுக்க இய­லும்.

இத்­த­கைய கண்­கா­ணிப்­புச் சோதனை முயற்­சி­கள் நோயா­ளி­களுக்கு மட்­டு­மா­னவை அல்ல.

சில நேரங்­களில் ஆரோக்­கி­ய­மா­ன­வர்­களும் இவற்றில் பங்­கெ­டுக்­கக்­கூ­டும்.