$200 மி. நம்பகத்தன்மை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

$200 மி. நம்பகத்தன்மை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

2 mins read
dfa22b1f-52d0-4cad-a90a-349baf1da742
-

சிங்­கப்­பூ­ரின் எம்­ஆர்டி, பொதுப் பேருந்­துச் சேவை வழங்­கு­நர்­க­ளுக்­குக் கடந்த ஆண்டு நம்­ப­கத்­தன்மை ஊக்­கத்­தொ­கை­யாக கிட்­டத்­தட்ட $200 மில்­லி­யன் வழங்­கப்­பட்­ட­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

எம்­ஆர்டி கட்­ட­மைப்­பின் ஒட்­டு­மொத்த செயல்­தி­றன் ஐந்­தாண்­டு­களில் புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ளது. அத்­து­டன் பொதுப் பேருந்­துச் சேவை வழங்­கு­நர்­களில் ஒரு நிறு­வ­ன­மா­வது ஆண்டு அடிப்­ப­டை­யில் முன்­னேற்­றம் கண்­டுள்­ளது. இதன் அடிப்­ப­டை­யில் இந்த ஊக்­கத்­தொகை வழங்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. கொள்­ளை­நோ­யால் பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பய­ணங்­கள் குறைந்­தி­ருந்த சூழல், பேருந்து நிலைய ஓட்­டு­நர்­க­ளி­டையே கொவிட்-19 கிரு­மிப் பர­வல் ஏற்­பட்டு காத்­தி­ருப்பு நேரம் அதி­க­ரிப்பு என்ற பின்­ன­ணி­யி­லும் இந்த ஊக்­கத்­தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது.

பொதுப் போக்­கு­வ­ரத்­துக்­கென கடந்த ஆண்டு வழங்­கப்­பட்ட கட்­டணச் சலு­கை­களில் ரயில், பேருந்­துக்­காக தரப்­பட்ட இந்த ஊக்­கு­விப்­புத் தொகை ஏறத்­தாழ 10% என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

பொதுப் போக்­கு­வ­ரத்­துக்­கு­ரிய கட்­ட­ணச் சலு­கை­க­ளுக்­காக அர­சாங்­கம் ஆண்­டுக்கு $2 பில்­லி­யன் ஒதுக்­கும் நிலை­யில், அதில் இந்த $200 மில்­லி­யன் அடங்­கி­யுள்­ளது.

இதற்­கி­டையே 2020ஆம் ஆண்­டில் வழங்­கப்­பட்ட நம்­ப­கத்­தன்மை ஊக்­கத்­தொ­கை­யும் கிட்­டத்­தட்ட இதே அள­வாக இருந்ததென ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்து வந்­தது.

இரு சேவைத் தடை­க­ளுக்கு இடையே சரா­ச­ரி­யாக ஒரு மில்­லியன் கிலோ­மீட்­டர் தூரம் செல்ல முடிந்­த­தால் ரயில் சேவை வழங்­கும் எஸ்­எம்­ஆர்டி, எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னங்­க­ளுக்கு மொத்­தம் $173 மில்­லி­யன் நம்­ப­கத்­தன்மை ஊக்­கத்­தொகை கடந்த ஆண்டு வழங்­கப்­பட்­டது. 2020ஆம் ஆண்டி­லும் நிறு­வ­னங்­க­ளுக்கு இதே தொகை வழங்­கப்­பட்­டது. பேருந்­துச் சேவை வழங்­கு­நர்­க­ளான எஸ்­பி­எஸ் டிரான்­சிட், எஸ்­எம்­ஆர்டி, டவர் டிரான்­சிட் சிங்­கப்­பூர் மற்­றும் கோ-அஹேட் சிங்­கப்­பூர் நிறு­வனங்­க­ளுக்கு மொத்­தம் சுமார் $27 மில்­லி­யன் வழங்­கப்­பட்­டது.

அர­சாங்­கம் 2016ல் நடை­முறைப்­ப­டுத்­திய ஒப்­பந்­தத் திட்­டத்­தின் கீழ், செயல்­தி­றன் அடிப்­ப­டை­யில் பேருந்­துச் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு ஊக்­கத்­தொ­கை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டு­கிறது.

கொள்­ளை­நோய் சூழ­லில் தம் நிறு­வ­னத்­தின் செயல்­பா­டு­களும் பரா­ம­ரிப்­புக் குழு­வும் அதி­கம் உழைத்­த­தாக எஸ்­எம்­ஆர்டி நிறு­வனத்­தின் துணைக் குழு­மத் தலைமை நிர்­வாகி திரு லீ லிங் வீ கூறி­னார்.

"நம் ரயில்­கள், பேருந்­து­களில் மேலும் அதி­க­மா­னோர் பய­ணம் செய்­யத் தொடங்­கி­யுள்ள நிலை­யிலும் பய­ணி­களை நிறு­வ­னம் நன்­கு கவ­னித்­துக்­கொள்­கிறது," என்­றார் அவர்.

கூடு­தல் காத்­தி­ருப்பு நேரத்­தின் அடிப்­ப­டை­யி­லும் பேருந்­துச் சேவை வழங்­கு­நர்­க­ளின் செயல்­தி­றன் மதிப்­பி­டப்­ப­டு­கிறது. எவ்­வ­ளவு நேரம் காத்­தி­ருக்க வேண்­டும் என்று கூறப்­படும் தக­வ­லும் உண்­மை­யில் எவ்­வளவு நேரம் ஆகிறது என்ற தக­வ­லும் இதற்­காக ஒப்­பி­டப்­படும்.