துணிகரத் திட்டங்களுக்கான நிதி ஆதரவு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

துணிகரத் திட்டங்களுக்கான நிதி ஆதரவு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

2 mins read
5de45da3-20f7-4084-b765-b2ff19509b46
-

துணி­க­ரத் திட்­டங்­க­ளுக்­கான நிதி எனப்­படும் 'த கரேஜ் ஃபண்ட்' கீழ் அமல்­ப­டுத்­தப்­பட்ட அனைத்து கொவிட்-19 நிவா­ர­ணத் திட்­டங்­களை­யும் நேற்­றோடு முடக்­கி­விட்­ட­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் தேசிய சமூக சேவை மன்­ற­மும் அறி­வித்­துள்­ளன.

இருப்­பி­னும் இவ்­வாண்டு மே 24ஆம் தேதிக்கு முன் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் என்று மருத்­துவ ரீதி­யாக உறு­திப்­படுத்­தப்­பட்­ட­வர்­கள் தொடர்ந்து உதவி கோரி விண்­ணப்­பிக்­க­லாம் என்று இரு தரப்­பு­களும் நேற்று தெளி­வு­ப­டுத்­தின.

கொள்­ளை­நோய்ச் சூழ­லில் 'த கரேஜ் ஃபண்ட்' திட்­டத்­தின் மூலம் கிட்­டத்­தட்ட 30,000 பேர் பலன் அடைந்­துள்­ள­னர். கிரு­மி­யால் நேரடி­யாக பாதிக்­கப்­பட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மற்­றும் முன்­கள ஊழி­யர்­களும் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­களும் இந்­தப் பிரி­வி­ன­ரில் அடங்­கு­வர்.

சார்ஸ் நோய்ப் பர­வ­லின்­போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­கும் ஆத­ரவு வழங்­கும் வகை­யில் இத்­திட்­டம் 2003ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்­டது.

'டோர்ஸ்­கோன்' எனப்­படும் தேசிய அள­வி­லான நோய்ப் பர­வலுக்­கு­ரிய விழிப்­பு­நிலை எச்­ச­ரிக்­கைக் கட்­ட­மைப்பு, ஏப்­ரல் 26 முதல் மாற்­றம் கண்­ட­தை­யும் சமூக, எல்லை நடை­மு­றை­களில் பெரு­மளவு தளர்­வு­கள் ஏற்­பட்­டுள்­ள­தை­யும் கருத்­தில் கொண்டு மறு­ஆய்வு நடந்­ததை அடுத்து 'த கரேஜ் ஃபண்ட்' திட்­டங்­கள் நிறுத்­தப்­ப­டு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

வேலை­யின்­போது கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு இந்­நிதி உதவு­கிறது. அத்­து­டன் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் வேலை­யில் இருந்­த­போது கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்த நிலை­யி­லும் அவர்­க­ளைச் சார்ந்­துள்ள குடும்­பத்­தா­ருக்­குத் திட்­டம் கைகொடுத்­துள்­ளது.

பணி­யின்­போது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், முன்­கள ஊழி­யர்­கள், சமூ­கத் தொண்­டூ­ழி­யர்­கள் போன்­றோர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்த நிலை­யி­லும் திட்­டத்­தின் மூலம் அவர்­களின் பிள்­ளை­க­ளுக்­குக் கல்வி மானி­யம் வழங்­கப்­பட்­டது.

திட்­டத்­திற்­குத் தகு­தி­பெ­றக்­கூடிய­வர்­கள் இவ்­வாண்டு ஜூலை 24ஆம் தேதிக்­குள் நிதி கோரி விண்­ணப்­பிக்­க­லாம்.

இதற்­கி­டையே 'த கரேஜ் ஃபண்ட்' திட்­டங்­க­ளுக்­குத் தகு­தி­பெ­றா­த­வர்­கள், நிதி ஆத­ரவு தேவைப்­படும் நிலை­யில் 'கொவிட்-19 மீட்சி மானி­யம்' கோரி விண்­ணப்­பிக்­க­லாம்.

வேலை இழப்பு, கணி­ச­மான வரு­மான இழப்பு, சம்­ப­ள­மில்லா கட்­டாய விடுப்பு போன்­ற­வற்­றுக்கு ஆளா­கி­யி­ருந்­தால் 'கொவிட்-19 மீட்சி மானி­யம்' கோரி விண்­ணப்­பிக்க முடி­யும்.