'நோய்த் தடுப்புப் பராமரிப்பில் கவனம் செலுத்துவோம்'

1 mins read
2ad978e0-7e79-45c0-8eb0-329505bc3ab8
-

நோய் வந்த பிறகு மருத்­து­வம் பார்ப்­ப­தை­விட நோயைத் தடுத்து சுகா­தார நலன் பேணு­வ­தில் கவ­னம் செலுத்­து­வ­தற்கு அடுத்த பத்து ஆண்­டு­களில் சிங்­கப்­பூர் முன்­னு­ரிமை தரும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தத் திட்­டத்­திற்கு குடும்ப மருத்­து­வர்­கள் முக்­கி­யப் பங்­காற்­று­வார்­கள் என்று கூறிய அவர், குடும்ப மருத்­து­வர்­க­ளுக்கு மேம்­பட்ட ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு சிங்­கப்­பூ­ரில் பொதுக் கொள்­கை­கள் தேவைப்­படும் என்­றார்.

குடும்ப மருத்­து­வர்­க­ளுக்­கும் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் இடையே வலு­வான தொடர்­பு­களும் மருத்­து­வப் பரிந்­துரை நெறி­மு­றை­களும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும். அப்­போது­தான் சிக்­க­லான, கடு­மை­யான சுகா­தா­ரப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் மருத்­து­வ­ம­னை­கள் தகுந்த உத­வியை வழங்க இய­லும் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

மருந்­துக் குறிப்­பு­களை மட்­டுமே வழங்­கா­மல் ஆரோக்­கி­ய­மான பழக்­க­வ­ழக்­கங்­களை ஊக்­கு­விக்­கும் உண­வு­முறை, உடற்­ப­யிற்சி பரிந்­து­ரை­க­ளை­யும் குடும்ப மருத்து­வர்­கள் வழங்க வேண்­டும் என்­றார் அவர்.

சுவிட்­சர்­லாந்­தின் ஜெனிவா நக­ரில் நடந்த 75வது உல­கச் சுகா­தா­ரக் கூட்­டத்­தின்­போது அவர் இத­னைக் குறிப்­பிட்­டார்.

மக்­கள் குறிப்­பிட்ட ஒரு குடும்ப மருத்­து­வரை அடிக்­கடி நாடு­வ­தும் ஆலோ­சனை பெற அதே மருத்­து­வரை நீண்ட காலத்­திற்­குத் தக்க வைத்­துக்­கொள்­வ­தும் சிறப்பு என்­பதை அர­சாங்­கம் ஊக்­கு­விக்க வேண்­டும் என அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.