அதிகாரத்துவ தகவலைக் கசியவிட்டவருக்குச் சிறை

அதிகாரத்துவ தகவலைக் கசியவிட்டவருக்குச் சிறை

2 mins read
f547560a-18aa-462a-8d2f-04865602b922
-

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்­டாம் கட்ட கொவிட்-19 தளர்வு­கள் தொடர்­பான தக­வ­லைக் கசி­ய­விட்ட தேசிய நூலக வாரி­யத்­தின் துணை இயக்­கு­நர் ஒரு­வருக்கு நான்கு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சுவா வீ லின், 52 (படம்), நேற்று மாவட்ட நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார். அதிகாரத்துவ ரக­சிய சட்­டத்­தின்­கீழ், மற்­ற­வர்­களுடன் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டாத தக­வ­லைப் பகிர்ந்­த­தாக ஒரு குற்றச்­சாட்டை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

தேசிய நூலக வாரிய சொத்து, வச­தி­கள் மேலாண்மை துறை­யின் துணை இயக்­கு­ந­ராக பொறுப்பு வகித்த சுவா­வி­டம் அந்­தத் தக­வல் இருந்­தது.

அர­சாங்­கம் அந்­தத் தக­வ­லைப் பொது­மக்­க­ளி­டம் வெளி­யி­டு­வ­தற்கு முன்­ன­தாக 2020 ஜூன் 11ஆம் தேதி, 18 பேர் இருந்த வாட்ஸ்­அப் குழு­வில் சுவா அதைக் கசி­ய­விட்­டார்.

பாது­காக்­கப்­பட வேண்­டிய அந்தத் தக­வலை வாட்ஸ்­அப் குழு உறுப்­பி­னர்­கள் மற்­ற­வர்­க­ளி­டம் பகிர்ந்­த­தாக காவல்­துறை கடந்த ஆண்டு மே மாதம் தெரி­வித்­து இ­ருந்­தது.

இத­னால், அந்­தத் தக­வல் வெளி­யி­டப்­பட வேண்­டிய நேரத்­திற்கு முன்­பா­கவே அது பர­வ­லா­னது.

அந்­தத் தக­வ­லைப் பெற்­றுக்­கொண்டு அதை மற்­ற­வர்­க­ளி­டம் பகிர்ந்த அறு­வ­ருக்­குக் கடும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­படும் என்று காவல்­துறை கூறி­யது.

அதிகாரத்துவ ரக­சிய சட்­டத்­தின்­கீழ், தம்­மு­டைய அர­சாங்­கப் பொறுப்பைப் பயன்­ப­டுத்தி, பாது­காக்­கப்­பட வேண்­டிய தக­வலை மற்­றொ­ரு­வரிடம் பகிர்­வது குற்­ற­மா­கும். அத்­த­கைய தக­வ­லைப் பெற்­றுக்­கொள்­வ­தும் சட்­டத்­துக்­குப் புறம்­பா­னது.

2020 ஜூன் 13ஆம் தேதி சுவா கைது செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து, அவர் உட­ன­டி­யாக பணி­யி­டை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­தாக தேசிய நூலக வாரிய பேச்­சா­ளர் ஒரு­வர் கடந்த ஆண்டு மே மாதம் கூறி­யி­ருந்­தார்.